Sunday, July 31, 2016

ஷாந்தி மந்திரம்

நம்முடைய நன்மைக்காக இறைவனிடம் முறையிடும் நாம், நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற இந்த பிரபஞ்சத்தின் நன்மையையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் அல்லவா? அதற்கேற்றாற்போல் இருக்கிறது இந்த ஸ்லோகம். உலகத்தில் நன்மை, அமைதி, முழுமை, வளம் உண்டாகின், நமக்கு வேறென்ன வேண்டும்? இயற்கை நம்மை சுகமாக வாழவைப்பது எவ்வளவு உண்மையோ, அதே உண்மையை நாமும் இயற்கையிடம் காண்பிக்க வேண்டும் தானே? சர்வமும் வளம்பெற இந்த ஸ்லோகத்தை தினமும் கூறுவோம்!

ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

எங்கும் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் அமைதி உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் முழுமை உண்டாகட்டும்
எங்கும் எல்லாவற்றிலும் வளம் உண்டாகட்டும்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

சர்வே பவந்து சுக்கின
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ராணி பச்யந்து,
மா கச்சித் துக்க பாக் பவேத்.

எல்லா மக்களும் சுகமாக இருக்கட்டும்,
எல்லா மக்களும் வியாதி இல்லாமல் இருக்கட்டும்,
எல்லா மக்களும் பத்திரமாக உணரட்டும்
எவருமே, எங்குமே துக்கம் இல்லாமல் இருக்கட்டும்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

No comments:

Post a Comment