Wednesday, September 28, 2011

ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள்

இந்த கட்டுரை முலம் யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல......... எனக்குள் இருக்கும் அதங்களை பகிருந்து கொள்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும்.........

பிரவீன் : என்ன தம்பி, கையில் தேசிய கொடி, ஷர்ட் இல் ஒரு badge , சுகந்திர தினம் முடிஞ்சு பத்து நாள் ஆகுது இல்ல, இன்னும் அந்த ஷர்ட் மாற்ற வில்லையா.....?
சுந்தர் : அண்ணே இது எல்லாம் ரொம்ப ஓவர், சுகந்திர தினத்தில் மட்டும் தான் கையிலே தேசிய கொடி வைத்து கொள்ள வேண்டுமா?

பிரவீன்: ஆமா வருடத்தில் இரண்டு நாளில்(சுகந்திர நாள் மற்றும் குடியரசு தினம் ) மட்டும் தானே நமக்கு நாட்டு பற்று வருகிறது.....
சுந்தர்: அண்ணே மற்றவர்களுக்கு வேண்டும் என்றால் அப்படி இருக்கலாம் எனக்கு என் தாய் நாட்டு பற்று நிறைய இருக்கு.....
பிரவீன்: இருந்தால் சந்தோசம் தான்!, இப்ப எங்க இருந்து வர.......

சுந்தர்: போரட்டத்தில் கலந்து கொண்டு வருகிறேன்.......
பிரவீன் : எதற்காக போராட்டம்?

சுந்தர்: அண்ணே நீங்கள் ஒரு இந்தியரா, நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கு, ஒன்றும் தெரியாத உங்களுக்கு?
பிரவீன்: தெரியுல சொல்லுங்க தம்பி

சுந்தர்: அண்ணா ஹசாரே க்கு அதரவாக போராடி விட்டு வருகிறேன்....

பிரவீன்: மிக்க நல்லது, உங்கள் போராட்டத்தின் நோக்கம் என்ன?

சுந்தர்: கருப்பு பணத்தை கொண்டு வருவதற்காக அண்ணா ஹசாரே போராடி வருகிறார்
பிரவீன்: நான் எதிர்ப்பார்த்தேன் தம்பி இந்த பதிலே...... கருப்பு பணம் வந்ததா?



சுந்தர்: சீக்கிரத்தில் வந்துரும்(1 ,456 லட்சம் கோடி ) !, அதற்க்கு அப்புறம்
  1. "இந்திய பணகார நாடுகளில் முதல் இடத்திற்கு வந்துரும் ஆகிடும், "
  2. "ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 60,000 கோடி கிடைக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் 100 கோடி கிடைக்கும்..."
  3. "இன்னும் 20 வருடத்திற்கு நாம் வரி கொடுக்க தேவை இல்லை...."
  4. பெட்ரோலின் விலை வெறும் 25 ரூபாய்,
  5. டீசல் விலை வெறும் 15 ரூபாய்,
  6. பாலின் விலை வெறும் 8 ரூபாய் ,
  7. பீரின் விலை வெறும் 8 ரூபாய்,
  8. வோட்கா வின் விலை வெறும் 20 ரூபாய்
  9. whisky வின் வெறும் 35 ரூபாய்
  10. soda வின் விலை வெறும் 1 .25 ரூபாய்
  11. சிகரட்டின் விலை வெறும்.50 காசு தான்

பிரவீன்: ஹா ஹா ஹா, முட்டாள்கள் இருக்கும் வரை இப்படி தான் எமாற்றி கொண்டு இருப்பார்கள்., மேலை சொன்ன தகவல்கள் எல்லாம் பொய்யானவை கொஞ்சம் பொறுமையாக சிந்தித்து பார், நாட்டில் எத்தனை மாவட்டங்கள்/கிராமம் இருக்கு, அதற்க்கு 100 கோடி என்றால் எவ்வளவு ஆகும் என்று கணக்கு போட்டு பார்., 80 ரூபாய் உள்ள பெட்ரோலின் விலை 25 ரூபாய் , 80 ரூபாய் உள்ள பீர் இன் விலை 8 ரூபாய் ஆம், எப்படி தம்பி....

சுந்தர்: ஆமாம் அண்ணே , கொஞ்சம் யோசிக்க வேண்டியது விஷயம் தான்.......

பிரவீன் : மேலும் அண்ணா ஹசாரே போராடுவது கருப்பு பணத்திற்காக இல்லை

சுந்தர்: வேற எதற்காக போராடுகிறார்.,
பிரவீன்: அவர் போராடுவது ஊழலை எதிர்த்து,

சுந்தர்: ஆமாம் அண்ணே நானும் கேள்வி பட்ட இருக்கிறேன் , ஜன லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தானே போராடுகிறார்....
பிரவீன்: மிக சரியாக சொன்னாய்,

சுந்தர்: இந்த ஜன லோக்பால் முலம் ஊழலே ஒழித்து விடலாம் இல்லையா அண்ணே!
பிரவீன்: முடியவே முடியாது

சுந்தர்: என்ன அண்ணே சொல்லுரிங்க, இவ்வளவு பெரிய போராட்டங்கள் , மக்கள் எழுச்சி நான் பார்த்தது இல்லை, கண்டிப்பாக ஊழலுக்கு எதிராக வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
பிரவீன்: முட்டாள் முட்டாள் , போராட்டங்கள் நடுத்துவதால் இங்கு இருந்து லஞ்சமோ , ஊழலலோ ஒழிந்து விடாது.,

சுந்தர்: அப்போழ்து அண்ணா ஹசாரேவை நீங்கள் நம்பவில்லை, அவர் போரட்டத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை அப்படி தன.,
பிரவீன்: நான் அப்படி சொல்லவே இல்லை., அண்ணா ஹசரேவின் போராட்டம் உண்மையானதாக இருக்கலாம்., ஆனால் அவர்க்கு அதரவு தெரிவிப்பது போல் பலர் சுயவிளம்பரம் தேடி கொள்கிறார்கள்,., பல தவறான மற்றும் அடிப்படை ஆதாரம் இல்லாத விஷயங்களை சொல்லி அண்ணா ஹசாரே அதிரியுங்கள் என்று கேட்பதும்., எடுத்துகாட்டு நீ மேல சொன்ன கருப்பு பணம் விவகாரம் போல்., தேர்வுக்கு பயந்து கல்லூரிக்கு செல்லாமல் கேட்டால் அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு சென்றோம் என்று சொல்வதும், தவறா இல்லையா...... சிலர் அரசியல் லாபத்திற்காக ஆதரிப்பது போல் நடிப்பதும்., அவர் போராட்டத்தை அசிங்க படுத்தி கொண்டு இருப்பது போல் இருக்கிறது.,

மேலும் ஊழலை எதிர்த்து போராட எனக்கும் உனக்கும் எந்த ஒரு தகுதியும் இல்லை என்று நான் சொல்வேன்
சுந்தர்: என்ன அண்ணே சொல்லுரிங்க

பிரவீன்: ஆமாம் தம்பி, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல் பார்ப்போம்
சுந்தர்: கேளுங்க அண்ணே சும்மா டான் டான்னு சொல்லுறேன்

பிரவீன்: நீங்கள் கல்லூரியில் சேர donation செலுத்துவது லஞ்சம் இல்லையா., தினந்தோறும் டிராபிக் போலீஸ் க்கு தருவது லஞ்சம் இல்லையா., அல்லது கோவிலில் சிக்கிரம் சென்று சாமி பார்க்க ஸ்பெஷல் தரிசனம் என்று பணம் கொடுத்து செல்வது லஞ்சம் இல்லையா........
சுந்தர்: அண்ணே அது எப்படி லஞ்சம் ஆகும்.,

பிரவீன்: பின்னே உனக்கு முன்னாடி வருபவர் காத்து கொண்டு இருக்க நீ பணம் கொடுத்து ரசிது வாங்கி கொண்டு முன்னாடி செல்வது லஞ்சம் இல்லையா சொல் பார்க்கலாம்.,தினம் தினம் லஞ்சம் ஒரு பக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறோம் , மறு பக்கம் ஊழலே ஒழிப்போம் என்று போராடுவது வேடிக்கையாக இருக்கிறது., உன் மனதை தொட்டு சொல் என்னால் லஞ்சம் தராமல் இருக்க முடியும் என்று நம்புகிறாய ?
சுந்தர்: கண்டிப்பாக முடியாது அண்ணே!

பிரவீன்: மேலும் உன்னால் ., ஒரு புரோக்கர் அல்லது driving school இல்லாமல் license வாங்க முடியுமா சொல் பார்க்கலாம்?, அரசு துறைகளிலும் , தனியார் துறைகளிலும் தற்போது ஊழல் நன்றாக வளர்ந்து விட்டது.., இதை எந்த ஒரு சட்டத்தால் திருத்த முடியாது., பிறர் சட்டம் ஏற்றினால் லஞ்சம் ஓழியும் என்று பகல் கனவு காண்பதை விட... முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவோம்........ இன்று ஊழலை எதிர்த்து ஒன்று கூடிய நாம் அப்படியே லஞ்சம் ஒரு ரூபாய் என்றாலும் கொடுக்க மாட்டோம் என்று உருதி எடுத்து கொள்வோம்.,

கடைசியாக .,
ஊழல் இல்லா நாட்டை உருவாக்குவோம், முதலில் நாம் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி விட்டு.........
இவன்
பிரவீன் சுந்தர் பு. வெ.

No comments:

Post a Comment