Wednesday, September 28, 2011

மரண தண்டனை

இந்த கட்டுரை முலம் யார் மனதையும் புண்ப்படுத்துவது   என் நோக்கம் அல்ல., எனக்குள் இருக்கும் கேள்விகளும் விடைகளும் அவ்வளவே......

பிரவீன்: என்ன தம்பி லோக்பால் மசோதா ஏற்றியாச்ச ?, உங்கள் போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சா?
சுந்தர்:  இல்ல அண்ணே!, சீக்கிரத்தில் ஏற்றி  விடுவார்கள்...

பிரவீன்: சந்தோசம் சந்தோசம் , அப்புறம் என்ன ஏதோ போரட்டத்தில் கலந்து கொண்டதாக உன் விட்டில் கூறினார்கள்...
சுந்தர்: முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோர்க்கு தூக்கு தண்டனை  ரத்து செய்ய கோரி போராட்டம். மேலும் இவர்கள் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி தீயிட்ட எங்கள் விர மங்கை செங்கொடி அவர்களுக்கு  அஞ்சலி   செலுத்த சென்றோம்.....

பிரவீன்: விர மங்கையா? தம்பி அவள் தமிழ் உணர்வு கொண்டவளாக இருக்கலாம் அது தவறு அல்ல, ஆனால் அதற்காக உயிர் விடுவது எந்த வகையில் நியாயம்.... இவளை இவ்வளவு நாள் வளர்த்த இவர் குடும்பத்துக்கு  என்ன பயன் இந்த தற்கொலையால்., போராளி என்பவன் கடைசி வரை போராடுபவன் தான், உயிரே மாயித்து கொள்ளுபவன்  அல்ல....... நாளை நிதிமன்ற  கதவுகள்  அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து விட்டால், போன அவள் உயிர் திரும்ப வருமா சொல் பாப்போம்?
சுந்தர்: அண்ணே அவள் மரணம் தமிழர்களே தட்டி எழுப்பியது. அதனால் தான் இன்று தூக்கு தண்டனை எதிர்த்து அனைவரும் போராடுகிறார்கள்....  

பிரவீன்: அவள் தமிழர்களே தட்டி எழுப்பினாலோ இல்லையோ , அரசியல்வாதிகளையும்  , பத்திரிகை நிருபர்களையும் தட்டி எழுப்பி விட்டால், இவர்களுக்கு ஒரு நல்ல  இடம் அமைத்து விட்டால், இன்னும் கொஞ்ச பிரபலம் அடைய......

சுந்தர்: அண்ணே, அவள் அந்த மூன்று பேர் மரணத்தில் இருந்து காப்பாற்ற  இவள் இறந்தால் ....
பிரவீன்: சரி யார் அந்த மூன்று பேர்?, சுகந்திர போராட்ட தியாகிகளா, இல்லை நம் நாட்டில் உள்ள குறைகளை எதிர்த்து போராடியவர்களா , நம் நாட்டிக்காக உளவு பார்த்து எதிரி நாட்டில் சிக்கி கொண்டவர்களா ? யார் இவர்கள்?

சுந்தர்: அண்ணே முன்று பெரும் அப்பாவி தமிழர்கள், இவர்கள் நமது முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.இவர்கள் வெறும் கை பாவைகள் தான், இவர்களை வழி முறை படித்தியவர்கள்  பலர் இன்று நிம்மதியாக உலவி கொண்டு இருக்கும் பொது இவர்களே மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்     

பிரவீன்: சரி இவர்கள் செய்த குற்றம் என்ன?
சுந்தர்: முருகன்  கொலைக்கு திட்டம் திட்டியது , சாந்தன் battery வாங்கி கொடுத்தது,  பேரறிவாளன், பெயர் குழப்பத்தில்  மாட்டி கொண்டவன் அவ்வளவு தான்.,

பிரவீன்: தம்பி சாந்தன் battery  வாங்கி கொடுத்தது தப்பு இல்லை ஆனால் எதற்காக வாங்கி கொடுத்தான் என்பது தான் இங்கு கேள்வி?  பேரறிவாளன், பெயர் குழப்பத்தில்  மாட்டி கொண்டவன் என்றால் என் அவரால் இது நாள் வரை அதே நிருப்பிக்க  முடியவில்லை., மேலும் இவர்கள் அப்பாவி தமிழர்கள் என்று சொல்லுவதே நான் ஏற்று கொள்ள மாட்டேன்.... திட்டமிட்டு செய்த கொலை அது., இதற்காக நன்றாக திட்டமிட்டு பல முறை ஒத்திகை பார்த்து பின் நடைமுறை படுத்திய கோர தாண்டவம்  அது?

சுந்தர்: அண்ணே நீங்க நினைக்கிற  மாதிரி ராஜீவ் காந்தி ஒன்றும் அவ்வளவு நல்லவர் இல்லை, அவரை இவர்கள் இல்லை என்றாலும் வேறு யாராவது  கொலை செய்து இருப்பார்கள்....

பிரவீன்: நல்லா இருக்கு தம்பி, எல்லோரும் ஒரு நாள் மரணம் அடைய வேண்டியவர்கள் தான் அதற்காக நான் போய் அவர்களே இன்றே கொலை செய்ய முடியுமா சொல் பார்ப்போம்?    மேலும் ராஜீவ் காந்தி நல்லவரா இல்லையா என்பது முக்கியம் அல்ல, ஒரு உயிரே எடுக்கும்  உரிமை இவர்களுக்கு யார் கொடுத்தது?.

சுந்தர்:  அண்ணே அவர் இலங்கை தமிழர்களே நம்ப வைத்து துரோகம்  செய்தார், அதனால்   அவருக்கு  அந்த தண்டனை தேவை தான்....

பிரவீன்: சரி தம்பி, நீ சொல்வதே நான் ஏற்று கொள்கிறேன்., துரோகம் செய்தது ராஜீவ் காந்தி அவரை மட்டும் கொலை செய்யலாமே அதை விட்டு பொது நிகழ்ச்சியில் குண்டு வைத்து ., அதனால்  அப்பாவி மக்கள் 18 பேர்  இறந்தனர் அதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறாய்.... அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் இப்படி கொடிய மரணம் அடைய.,  அவர்கள் பிணத்தை உறிவினர்கள் தொட்டு கும்மிட முடியாத நிலை, கை தனியாக, கால் தனியாக, உடல் தனியாக., அவர்களை பார்த்தல் உனக்கு பாவமாக இல்லையா ?

சுந்தர்: பாவம் தான் அண்ணே, அதற்காக இவர்களுக்கு மரண தண்டனை தேவை தானா?
பிரவீன்: கண்டிப்பாக தேவை தம்பி,
சுந்தர்: இல்ல அண்ணே, இவர்களுக்கு ஆயுள் தண்டனை தரலாம் இல்லையா?
பிரவீன்: தம்பி தண்டனைகள் கடுமையாக கடுமையாக குற்றங்கள் குறையும் என்று நம்புபவன் நான். இவர்களுக்கு கருணை அளித்தால் நாளை அப்துல் கசாப், தருமபுரி பேருந்துக்குள்  மாணவிகளே  எரித்தவன் என்று எல்லாருக்கும் கருணை அளிக்க வேண்டும்.,  இது தேவையா?,  தூக்கு தண்டனை இருக்கும் போதே இன்று கொலைகள் சர்வ சாதரணமாக நடந்து கொண்டு இருக்கிறது, அது இல்லாமல் போனால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய்விடும்.....

சுந்தர்: அண்ணே பொதுவாக தூக்க தண்டனை தேவையா?
பிரவீன்: கண்டிப்பாக  தேவை, மேலும் கொலை செய்யும் எல்லாருக்கும் தூக்கு தண்டனை தருவது இல்லை, அவர்கள் கொலை செய்ய வேண்டியதற்க்கான காரணம்,  நோக்கம், எல்லாம் ஆராய்ந்து     பிறகு தான் தூக்கு தண்டனை தருகிறார்கள்.

சுந்தர்: சரி அண்ணே தூக்கு தண்டனை தருவதால் கொலைகள் குறைந்து விட்டதா?
பிரவீன்: நல்ல  கேள்வி தம்பி!, ஒரு வழுக்கு விசாரித்து முடிவு தெரிவதற்குள் 10 முதல் 20 ஆண்டுகள் ஆகிறது,  மேலும் தூக்கு தண்டனை கொடுத்து விட்டால் குடியரசு தலைவர் இடம் கருணை மனு என்று பெயரில் ஒரு 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்., பின்னாளில் 30 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்தார் என்று சொல்லி தப்பித்து விடலாம் என்ற எண்ணம் உள்ள வரை தூக்கு தண்டனையும் நிறை வேறாது, குற்றங்களும் குறையாது.  தூக்கு தண்டனை என்பது என்னை பொறுத்த வரை வளைகுடா நாடுகளில் செய்வது போல் திறந்த வெளியில் தண்டனை தர வேண்டும் அப்பொழுது தான் மக்களுக்கு  அதன் மீது ஒரு பயம் இருக்கும்.,


சுந்தர்: அண்ணே தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டி மனித நேயம் போராடுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து?
பிரவீன்: முட்டாள் தனமான போராட்டம், மனித நேயம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தான், அரக்கர்களுக்கு அல்ல, திவரவாதம்  செய்பவன், குழந்தைகளே பாலியல் பலாத்காரம் செய்பவர்கள், இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை தேவையா இல்லையா ?, தம்பி, உனக்கும் எனக்கும் இந்த சம்பந்தமும்  இல்லை, நாளை நான் ஒரு குண்டு வெடிப்பில் கை தனியாக கால் தனியாக, சிதறி கிடந்தேன் என்றால்!, என்  பிணத்தை பார்க்கும் பொது உனக்கு என்ன தோன்றும் , அண்ணன் தான் இறந்து விட்டார், அவரை இந்த நிலைமைக்கு காரமானவரே  விட்டு விடலாம் என்று நினைப்பியா    இல்ல அவனுக்கு மரண தண்டனை வேண்டும் என்று போரடுவியா.....
சுந்தர்: கண்டிப்பாக குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன்.,     
 பிரவீன்: பிறகு என்னை தம்பி, அவர்கள் விட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்தால் அவர்கள் குற்றவாளிகளுக்கு   ஆதரவு தெரிவிப்பார்களா  என்பது தான் என் சந்தேகம்?

சுந்தர்: எப்பொழுதும்  எட்டியும் போட்டியும்மாக இருக்கும் நமது அரசியல் கட்சிகளே மரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் ஏற்றி இருக்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து?

பிரவீன்: இங்கு தீர்மானம் ஏற்றுவதால் ஒன்றும் ஆகிவிடாது , நமது முதல்வர் இந்த தீர்மானம் ஏற்றியதன்  முலம் தருமபுரி பேருந்து வழக்கில் உள்ளவரை மறைமுகமாக காப்பற்ற செய்யும் அரசியல் அவ்வளவு தான்... இந்த விஷயத்தில்  எல்லா  அரசில்வாதிகளும் அரசியல் செய்ய தான் பார்க்கீறார்கள், உண்மையில் இவர்களுக்கு மரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்பது கோரிக்கையும் அல்ல..... அல்லது அந்த மூன்று பேர் மேல் அக்கறையும் அல்ல , சாக கிடக்க இருப்பவர்களிடம் கூட அரசியல் செய்யும் அரக்கர்கள் தான் நம் அரசியல்வாதிகள் .,

சுந்தர்: என்ன அண்ணே இப்படி சொல்லிடிங்க...
பிரவீன்: ஆமா தம்பி, உயிர் போகும் விஷயத்தில் கூட இவர் கடிதம்  முலம் தான் தெரிவிப்பார் ., ஆனால் மயிர் போகும் விஷயம் (மந்திரி பதவிக்கு ) இவர் டெல்லி போவதும் என்ன என்று சொல்வது., அதே போல் சோனியா காந்தி , வெளி நாடுகளில்  சிகிச்சை மேற் கொண்டு இருக்கிறார் என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான், அப்படி இருக்கும் பொது இவர் யாருக்கு கடிதம் அணிப்பினார்  என்பது அவர்க்கு தான் வெளிச்சம்.(யாருமே இல்லாத விட்டுல யாருக்குட கடிதம்  எழுதுற)  , மேலும் தூக்கு தண்டனை ரத்து செய்ய பரிந்துரைப்பது உள்துறை அமைச்சகத்தின் வேலை, இதை பற்றி இவர் எத்தனை முறை சிதம்பரமிடம்  பேசினார் என்பதும் அவர்க்கு தான் வெளிச்சம்.,

சுந்தர்: சரி அண்ணே இப்ப அந்த மூணு பேருக்கு ஆயுள் தண்டனையா  இல்ல தூக்க தண்டனையா எது கிடைக்கும்?
பிரவீன்: நியாமாக  பார்த்தால் இவர்களுக்கு தூக்கு தண்டனை தான் தர வேண்டும், ஆனால்  மனித நேயம், மன்னாகட்டி   என்ற பெயரில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் என்று நினைக்கிறன்.

முடிவுரை : நிதிமன்றத்தின் முன் தண்டனை பெறுவது என்னமோ சின்ன சின்ன தவறுகள் செய்பவர்கள் தான்., நீங்கள் தவறு செய்ய நினைத்தால் பெரிய பெரிய தவறாக செய்யுகள் அப்பொழுது  தான் கருணை, மனிதநேயம் என்று சொல்லி சுலபமாக தப்பித்து விடலாம்.......  

No comments:

Post a Comment