Sunday, November 20, 2016

மோடியின் முதலை கண்ணீர்...

இந்த வருட ஆஸ்கார் விருது கண்டிப்பாக திரு மோ(ச)டி அவர்களுக்கு தான் வழங்க வேண்டும்...... என்னமா நடிக்கிறார்..... chanceless.....

// என் மக்கள் வீதிகளில் நிற்கும் கொடுமை என்னை மிகவும் வாட்டுகிறது. நான் என்ன செய்வேன்..என்று மீண்டும் கலங்க..பிரதமர் இல்ல ஊழியர்கள் பிரதமர் சாப்பிட மறுக்கும் விஷயத்தை அமித்ஷாவிடம் கூற அதிர்ந்து போனாராம்.... //

நானும் அப்படியே shock ஆயிட்டேன்..... ஷங்கர், மணிரத்னம் கூட இவ்வளவு அழகாக வசனம் எழுதி நடித்து இருந்து இருக்க மாட்டார்கள்.... Chanceless acting...
சரி விஷயத்துக்கு வருவோம்......

கருப்பு பணம் எப்படி உருவாகிறது, யாரிடம் எவ்வளவு உள்ளது, எப்படியெல்லாம்,எங்கெல்லாம் கை மாறி மீண்டும் நம் நாட்டிற்கு அந்நிய முதலீடு என்ற பெயரில் எப்படி வருகிறது என்பது பற்றி எல்லாம் பிரதமருக்கு தெரியாதா....?

நாட்டில் உள்ள 86% பணம் செல்லாதாக்கி விட்டால் மக்கள் இன்னல் படுவார்கள் என்பது அவருக்கு தெரியாதா..... அதற்கு முன்னேற்பாடுகள் செய்யமால் இவ்வளவு அவசரமாக இதை நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்பந்தமென்ன...?

கருப்பு பணம் ஒழிக்கயென்றால் அதன் பிறிப்பிடமான அம்பானி மற்றும் அதானி அவர்களோடு நட்பில் இருந்து கொண்டு எப்படி ஒழிப்பார்.....?
வெளிநாடு செல்ல உபயோகப்படுத்துவது அதானியின் சொந்த வானுர்தி.....!
ஆஸ்திரேலியாவில் உதவாது நிலக்கரி சுரங்கம் வாங்க State bank of India மூலம் 1 பில்லியன் வரை கடன் வழங்க உதவியது.....

இந்தியாவின் முக்கியமான நகர்களில்(கோவை ரேஸ் கோர்ஸ்,சென்னை இரயில் நிலையம்,விஜயவாடா இரயில் நிலையம்,பூரி,விசாக்கப்பட்டினம் மற்றும் பல ஊர்களில்) இணைய சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.... இந்த திட்டத்தை நமது மத்திய அரசாங்கம் கொடுத்து இருப்பது ரிலைன்ஸ்யின் ஜியோவிடம் தான்.... இதற்காக செலவாகும் பல லட்சம் கோடி ரூபாய் நம் வரி பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது......

இப்படி முழு நேரமாக அம்பானி மற்றும் அதானி அவர்களுக்காக வேலை செய்யும் பிரதமர் கருப்பு பணத்தை ஒழிப்பார் என்று சொல்லுவது நகைப்பாக இருக்கிறது.....

கள்ள நோட்டுகளை ஒழிப்பதும் ஒரு காரணம் என்றால் இதற்கு முன் திரு ரகுராம் ராஜன் இருந்தப்போது 2015 முன் அச்சிடப்பட்ட 500 தாள்கள் செல்லாது என்றும் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் அவகாசம் கொடுத்து மக்கள் மாற்ற வழி செய்தார்கள்.... அன்று யாரும் வங்கி வாசலில் பொழுப்பு கெடுத்து நின்று கொண்டுயில்லை.... அப்படியொரு நிகழ்வு நடந்தது கூட நம்மில் பலருக்கு தெரியாது.... அவ்வளவு சுலபமாக மக்கள் இன்னல்படமால் செய்வது சாமார்த்தியமா..... ? அல்லது இது சாமார்த்தியமா....?

மோடியின் திட்டம் கருப்பு பணத்தை ஒழிப்பதோ அல்லது கள்ள நோட்டை ஒழிப்பதோயில்லை..... முழுக்க முழுக்க எல்லா பரிவர்த்தனைகளை வங்கியின் மூலம் செயல்படுத்த மக்களை நிர்பந்தப்படுத்துவது தான்...... இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு மேலும் வரி விதித்து அவர்களை முழுவதுமாக அழித்து கார்ப்பேரேட் முதலாளிகளின் ஆட்சிக்கு வழிவகுக்க தான் இந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற நாடகம்.....

-பிரவின் சுந்தர் பு.வெ.(Praveen Sundar P.V.)

No comments:

Post a Comment