Sunday, November 20, 2016

What we expect from Modi, after January 1st 2017.

ஜனவரி வரை பொறுத்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக கருப்பு பணத்தை ஒழித்து ஏழை மக்கள் சந்தோசமாக வாழ வகை செய்வேன் என்றும் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் முதலீடு செய்வேன்.... என்று மோடி அவர்கள் சொல்கிறார்...

சரி அவர்கள் கூற்றை ஏற்று கொண்டு ஜனவரி வரை பொறுத்துக்கொள்கிறோம்....

ஜனவரி பிறகு அவர்களுக்கு 15 லட்சம் வேண்டாம், அவர்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், கல்வி, இலவச மருத்துவமனை என்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா....? கண்டிப்பாக செய்வேன் என்று மோடி அவர்கள் உத்தரவாதம் தர தயாரா..?

கண்டிப்பாக தர முடியாது, ஏனென்றால் கல்வி,மருத்துவமனை இன்று தனியார் மற்றும் அரசயில் வியாதிகளிடம் தான் உள்ளது.... இது என்று அரசுடமை ஆகுமோ அன்று தான் ஏழைகளுக்கு தீர்வு கிடைக்கும்...

இல்லை கொழுந்து விட்டு எரியும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா, விலைவாசி கட்டுக்குள் வருமா...,

கண்டிப்பாக கட்டுக்குள் கொண்டு வர முடியாது ஏயென்றால் பெட்ரோல்/டீசல் விலை நீர்நினைப்பது அரசு அல்ல தனியார் முதலைகள் (அம்பானி மற்றும் அதானிகள்) தான்..... இந்த சட்டத்தை திரும்ப பெற்று பெட்ரோல்/டீசல் விலை நிர்ணயிக்கும் சட்டம் மீண்டும் அரசை ஏற்குமா.....?

அப்படி செய்தால் கண்டிப்பாக விலைவாசி கட்டுக்குள் வரும்..... அது செய்ய மோடிக்கு துணுவு உண்டா ..?....

1,70,000 கோடி வராத கடன் வைத்துள்ள பெரும் கருப்பு பண முதலைகளிடம் வராத கடன் வசூலிக்க தைரியம் உண்டா.....?

இல்லையென்பது ஊரறிந்த ஒன்று தான்..... அவர்களுக்கு மேலும் பல லட்சம் கோடிகள் கடன் தர மட்டும் தான் மோடி அவர்கள் தயார்....

இப்படி பெரும் திருட்டு முதலாளிகளுக்கு மேலும் மேலும் கடன் தந்து கொள்ளடிப்பதை விட.....நாட்டில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு கொடுங்கள் சில லட்சங்கள் கடனாக, அவர்களும் தொழில் தொடங்க வழி விடுங்கள்....

நாட்டில் வேலையில்லா நிலைமை ஒழியும்.... நாட்டின் பொருளாதாரம் வரும்.....

இங்கு இருப்பவனுக்கு மேலும் மேலும் வாய்ப்புகள் கொடுக்க படுகிறது...... அவன் பிறர் வாய்ப்பை கெடுப்பது மட்டுமில்லாமல் வரியைப்பு செய்து நாட்டை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறான்....

இந்திய பொருளாதாரம் உண்மையில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கருப்பு பணமட்டும் அழிந்தால் போதாது.... கருப்பு பொருளாதாரம் தடை செய்யப்பட வேண்டும்.... போலி முதலாளித்துவம் ஒழிய வேண்டும்.....

இவையெல்லாம் செய்ய மோடியால் முடியாது.......

மக்களே சிந்திப்பீர்..... 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்பது ஒரு மாயத்தோற்றம்..... ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை சூறையாடும் மிக பெரிய சூழ்ச்சி..... விழித்துக்கொள்ளுங்கள்....

இந்த பாழாப்போன அரசியல் வியாதிகள் கார்ப்பரேட் முதலாளிகளின் கை கூலியாக இருக்கும் வரை நமக்கு விடிவில்லை.....

- இவன்
பிரவின் சுந்தர் பு.வெ. (Praveen Sundar P.V.)

No comments:

Post a Comment