Tuesday, July 21, 2015

Godavari Maha Pushkaram


இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

கோதாவரி ஆறு- இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய நதி கோதாவரி. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரியம்மகேஷ்வர் பகுதியில் பிரம்மம் கிரி மலையில் தொடங்கும் கோதாவரி, தெலங்கானா மாநிலத்தின் தர்மபுரி, காலேஷ்வரம், பாசரா, பத்ராசலம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ராஜமுந்திரி, நரசாபுரம், கொவ்வூரு, அந்தர்வேதி வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கோதாவரி நதியில் ராஜமுந்திரி அருகே பாபி கொண்டலு எனும் இடத்தில் பல்வேறு துணை நதிகள் கலக்கின்றன. அதன் பிறகு அகண்ட கோதாவரி நதியாக வங்கக் கடலில் கலக்கிறது. பூர்ணா (தெற்கு), ப்ரவரா, இந்திராவதி, மஞ்சிரா, பிந்துசார, சபரி வைன்கங்கா மற்றும் வார்த ஆறுகள் கோதாவரியின் கிளை ஆறுகளாகும்.

பகீரதனின் முயற்சியால் பூமிக்கு வந்த கங்கை நதி திரேதா யுகத்தை சேர்ந்ததாகும். ஆனால் சுமார் 1,465 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் கோதாவரி, அதற்கு முந்தைய கிரேதா யுகத்தைச் சேர்ந்த புண்ணிய நதி என கூறப்படுகிறது. வனவாசம் சென்ற ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் கோதாவரி நதிக்கரையில் சில நாட்கள் தங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கோதாவரி நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும்.  இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாட படுகிறது.

 மேலும் 144 வருடங்களுக்கு ஒரு முறை மஹா புஷ்கரம் கொண்டாப்படுகிறது. ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் 1857 ஆம் ஆண்டு இந்த மஹா புஷ்கரம் கோதாவரியில் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு இந்த ஆண்டு (2015) கோதாவரி ஆற்றில் மகாபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது இது ஜூலை 14 முதல் 25 வரை கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அடுத்த மஹா புஷ்கரம் கோதாவரி ஆற்றில் வரும் 2159 ஆண்டு கொண்டாப்படும்.

ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலத்தில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும் கோவில்கள் வருமாறு:–
-----------------------------------------------------------

பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).

Monday, July 20, 2015

What is Karma Yoga

What is Karma-Yoga..?

Even at the point of death to help any one, without asking questions. Be cheated millions of times and never ask a question, and never think of what you are doing. Never vaunt of your gifts to the poor or expect their gratitude, but rather be grateful to them for giving you the occasion of practicing charity to them. Thus it is plain that to be an ideal householder is a much more difficult task than to be an ideal Sannyasin; the true life of work is indeed as hard as, if not harder than, the equally true life of renunciation.

கர்மயோகம் என்றால் என்ன?

சாகின்ற நிலையிலும் கூட கேள்வி எதுவும் கேட்காமல் ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம், கோடி முறை நீங்கள் ஏமாற்றப் பட்டாலும் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள், ஏழைகளுக்குச் செய்யும் உதவி பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் உங்களிடம் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் மாறாக நீங்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். ஒரு லட்சிய இல்லறத் தானாக இருப்பது ஒரு லட்சியத் துறவியாக இருப்பதை விடக் கடினம் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். உண்மையான கர்மயோகம் உண்மையான துறவு வாழ்வைவிடக் கடினமான தில்லை என்றாலும், நிச்சயமாக, துறவு வாழ்விற்கு ஈடான கடுமை நிறைந்ததே.............

- சுவாமி விவேகானந்தர்


Sunday, July 12, 2015

Power of Self Sacrifice


முழுமையான தன்னல மறுப்பைக் கீழ்வரும் கதை விவரிக்கிறது; குருஷேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லோரும் அந்த யாகததின் சிறப்பையும் பெருமையையும் கண்டு வியந்து அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர். யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பில் ஒரு பகுதி பொன்னாகவும் மற்றப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது உள்ளே நுழைந்த அது யாக மண்டபத்தில் விழுந்து புரண்டது. பின்னர் எல்லோரையும் பார்த்து, நீங்கள் எல்லோரும் பொய்யர்கள் இது யாகமே அல்ல என்று கூறியது கேட்டவர்கள் திகைத்தார்கள் என்ன இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய் எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா? எல்லோருக்கும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.

அதற்குக் கீரிப்பிள்ளை கூறியது: முன்பொரு முறை  சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர் தன் மனைவி மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள் பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள் ஒரு முறை அந்த நாட்டில் மூன்று வருடங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலையில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத்தொடங்கினார். அந்த வேளையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது பிராமணர் கதவைத் திறந்தார் எதிரே விருந்தினர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இந்தியாவில் விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும். எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும் படி உபசரித்தார். வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினிகிடக்கிறேன் . இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது என்று கதறினார். உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம் என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள் வந்திருப்பவர் ஏழை வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை அவருக்குத் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித்தன் பங்கை அந்த விருந்தாளியின் பசி தீரவில்லை அவர் துடித்தார். இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன் தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை இதோ எடுத்து கொள்ளுங்கள் என்று தன் பங்கையும் கொடுத்தான்.அப்படியும் விருந்தாளியின் பசி அடங்க வில்லை. அவர் மிகுந்த வேதனைப்பட்டார் இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது அவர்களை வாழ்த்தி விடைபெற்றார். அந்த விருந்தாளி ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்,

அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள். அது போன்ற யாகம் எங்காவது நடைபெறுகிறதா என்று அன்றிலிருந்து நான் உலகம் முழுவதும் தேடுகிறேன். ஆனால் எங்கேயும் காண முடியவில்லை என் மீதி உடல் பொன்னாகவும் இல்லை அதனால் தான் இது யாகமே இல்லை என்கிறேன்.

தானம் பற்றிய இந்தக் கருத்து இப்போது இந்தியாவிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. மாமனிதர்கள் குறைந்து வருகிறார்கள். நான் முதன் முதலில் ஆங்கிலம் கற்றுக் கொண்டபோது கடமையுணர்வு கொண்ட ஒரு சிறுவனைப் பற்றிய ஆங்கிலக் கதையொன்றைப் படித்தேன் . தான் வேலை செய்து பெற்றுவந்த கூலியில் சிறு தொகையைத் தன் தாய்க்குக் கொடுத்தான் அவன். இதைப் புகழ்ந்து நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அது என்ன பிரமாதமோ! இந்தச் சிறுவன் ஒருவனுக்கு இந்தக் கதையின் நீதி புரியவே புரியாது. தனக்காகவே ஒவ்வொருவனும் என்ற மேலை நாட்டுக் கருத்தை அறிந்த பின்னரே இப்போது அந்தக் கதை எனக்குப் புரிகிறது. சிலரோ அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு தாய் தந்தை மனைவி மக்களைக்கூடத் தவிக்கும் படி விட்டுவிடுகிறார்கள் இல்லறத்தானின் லட்சியம் ஒரு போதும் ஓரிடத்திலும் இதுவாக இருக்கக் கூடாது.


----------------------------------English Version---------------------------------------------------------------

This idea of complete self-sacrifice is illustrated in the following story: After the battle of Kurukshetra the five Pândava brothers performed a great sacrifice and made very large gifts to the poor. All people expressed amazement at the greatness and richness of the sacrifice, and said that such a sacrifice the world had never seen before.

But, after the ceremony, there came a little mongoose, half of whose body was golden, and the other half brown; and he began to roll on the floor of the sacrificial hall. He said to those around, "You are all liars; this is no sacrifice." "What!" they exclaimed, "you say this is no sacrifice; do you not know how money and jewels were poured out to the poor and every one became rich and happy? This was the most wonderful sacrifice any man ever performed." But the mongoose said, "There was once a little village, and in it there dwelt a poor Brahmin with his wife, his son, and his son's wife. They were very poor and lived on small gifts made to them for preaching and teaching. There came in that land a three years' famine, and the poor Brahmin suffered more than ever. At last when the family had starved for days, the father brought home one morning a little barley flour, which he had been fortunate enough to obtain, and he divided it into four parts, one for each member of the family. They prepared it for their meal, and just as they were about to eat, there was a knock at the door. The father opened it, and there stood a guest.

Now in India a guest is a sacred person; he is as a god for the time being, and must be treated as such. So the poor Brahmin said, 'Come in, sir; you are welcome,' He set before the guest his own portion of the food, which the guest quickly ate and said, 'Oh, sir, you have killed me; I have been starving for ten days, and this little bit has but increased my hunger.' Then the wife said to her husband, 'Give him my share,' but the husband said, 'Not so.' The wife however insisted, saying, 'Here is a poor man, and it is our duty as householders to see that he is fed, and it is my duty as a wife to give him my portion, seeing that you have no more to offer him.' Then she gave her share to the guest, which he ate, and said he was still burning with hunger. So the son said, 'Take my portion also; it is the duty of a son to help his father to fulfil his obligations.' The guest ate that, but remained still unsatisfied; so the son's wife gave him her portion also. That was sufficient, and the guest departed, blessing them. That night those four people died of starvation. A few granules of that flour had fallen on the floor; and when I rolled my body on them, half of it became golden, as you see. Since then I have been travelling all over the world, hoping to find another sacrifice like that, but nowhere have I found one; nowhere else has the other half of my body been turned into gold. That is why I say this is no sacrifice."

This idea of charity is going out of India; great men are becoming fewer and fewer. When I was first learning English, I read an English story book in which there was a story about a dutiful boy who had gone out to work and had given some of his money to his old mother, and this was praised in three or four pages. What was that? No Hindu boy can ever understand the moral of that story. Now I understand it when I hear the Western idea — every man for himself. And some men take everything for themselves, and fathers and mothers and wives and children go to the wall. That should never and nowhere be the ideal of the householder.

Monday, July 6, 2015

Godavari Puskaralu

கோதாவரி புஷ்கரம்
=======

இந்தியாவில்  புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்

பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் (கங்கை), ரிஷபம் (நர்மதை), மிதுனம் (சரஸ்வதி), கடகம் (யமுனை), சிம்மம் (கோதாவரி) கன்னி (கிருஷ்ணா), துலாம் (காவேரி) விருச்சிகம் (தாமிரபரணி), தனுசு (சிந்து), மகரம் (துங்கபத்திரா), கும்பம் (பிரம்ம நதி), மீனம் (பிரணீதா) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகிய தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் ராசி நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் சிம்ம ராசியில் (ஜூலை 14 காலை 6.26)  பிரவேசிப்பதால் கோதாவரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது,  வரும் ஜூலை 14 அன்று தொடங்கி ஜூலை 25 அன்று முடிகிறது. 

கோதாவரி புஷ்கரம்  நடைபெறும் இடங்கள்.
-----------------------------------------------------------------
கோதாவரி புஷ்கரத்தில் கலந்துக்கொள்ள  தெலங்கான மாநிலத்தில் கரீம் நகர் (Karimnagar), காளிஷ்வரம் (Kaleshwaram), பாசர்(basar)  and பத்தராசலம்(Bhadrachalam),  ஆந்திரா மாநிலத்தில்  நரசாபுரம் (Narasapuram), கொவ்வூர் (Kovvur) and ராஜமுந்திரி (Rajahmundry) செல்லலாம்.  

பத்தராசலம் மற்றும் ராஜமுந்திரியில் கோதாவரி நதிக்கரையில் தெலங்கானா, ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.

கோதாவரி புஷ்கரம்  இணையத்தளம்

கோதாவரி புஷ்கரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு http://godavaripushkaralu.co.in என்ற இணையத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.