Friday, February 10, 2017

if Sasikala becomes CM..?

தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்....?

பொறுப்பு ஆளுநர் திரு வித்யா சாகர் ராவ் அவர்கள் ஒரு வேலை திருமதி சசிகலா அவர்களை ஆட்சி அமைக்க கோரி, திருமதி சசிகலா அவர்கள் ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக அடுத்து வரும் நாட்களில் திரு பன்னீர் செல்வம் அவர்கள் மேல் பல மோசடி வழக்குகள் பாயும்.... அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை மிரட்டி அவருக்கு எதிராக பேட்டியளிக்க நிர்பந்திக்க படுவார்கள்.... இல்லையெனில் அவர்கள் வெளியே வர முடியாது அளவுக்கு வழக்குகள் பாயும்......  

திருமதி சசிகலாவின் குடும்பத்தாரால் அதிகாரப்பூர்வமாக கட்டப்பஞ்சாயத்து செய்து அநியாய விலைக்கு மக்களின் சொத்துகள் பறிக்க படும்....

இன்று எம்.எல்.ஏ. கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப 3 நாட்கள் தனியார் விடுதிகளில் சுகத்திரமாக செயல்படுவது போல், நாளை இவர்கள் யாரை வேண்டுமானாலும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் விடுதிகளில் சுகந்திரமாக தங்க வைத்து காரியத்தை சாதித்து கொள்வார்கள்..... இவர்கள் தங்குமிடம் முதல்வர் முதல் போலீஸ், நீதிபதி என எல்லாருக்கும் தெரிந்தும் அவர்களை சந்திக்க முடியாது....  அவர்கள் அவ்வளவு பாதுக்காப்பாகவும், சுகந்திரமாகவும்  இருப்பார்கள்....  (சத்தியமா அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பிற்கும் மேல் தனியார் பாதுகாப்பும் சேர்ந்து தரப்படும்).... :) :) :) :) :)

ராம்குமார், ஸ்வாதி மரணம் முதல் முன்னாள் முதல்வர் செல்வி செ.செயலலிதா மரணம்  வரை பல மர்ம மரணங்கள் நடக்கும் எதற்கும் விடை கிடைக்காது.......

மாநிலத்தில் எவ்வளவு அக்கிரமம் நடந்தாலும், முத்த கட்சியினர்  முதல் தொண்டன் வரை யாரும் கேள்வி கேட்க கூடாது,  மீறி கேட்டால் அவர்கள் திமுகவிற்கு விலை போய் விட்டார்கள் என்றும், அவர்களுக்கு பச்சை துரோகி என்று பட்டமளித்து கட்சியினரானால் அவர்கள் ஆதரவு தொலைக்காட்சியில் வசைபாடி அவமானப்படுத்தப்படுவார்கள்......

கழக வரலாறு மற்றும் கட்சியின் முத்த நிர்வாகிகள் பற்றியெல்லாம் எந்த கவலையும் இவர்களுக்கு இல்லை, இவர்களின் தேவையெல்லாம் சசிகலாவிற்கு முதல்வர் பதவி, தடையில்லாமல் தமிழகத்தை கொள்ளையடிக்க வேண்டும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் அவ்வளவே......


-பிரவின் சுந்தர் பூ.வெ.

No comments:

Post a Comment