Tuesday, February 7, 2017

is Deepa fit for politics..?

முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இடத்தை அவரது அண்ணன் மகள் தீபா கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியாது....

தீபா அவர்களிடம் தொலை நோக்கு பார்வை சுத்தமாக இல்லை.... அரசியல் அனுபவமும் கிடையாது.... இவருடைய தற்போதைய நோக்கம் ஒன்று தான்.....
எரிகிற வீட்டில் கிடைக்கும் வரை லாபம் என்பது தான்..... அதாவது செல்வி செயலலிதா அவர்களின் மரணத்தால் கிடைக்கும் அனுதாப வாக்குகளையும், சசிகலா அவர்கள் மேல் உள்ள எதிர்ப்பு வாக்குகளையும் மொத்தமாக அறுவடை செய்து தான் எம்.எல்.ஏ ஆக வேண்டும் அவ்வளவு தான்.
பத்திரிகையாளர்கள் கேட்டும் எந்தொரு அடிப்படை கேள்விகளுக்கு கூட இவரிடம் பதில்லை..... இவர் சொல்லிய சில பதில்களும் கோமாளித்தனமாக உள்ளது....

"செல்வி செயலலிதா அவர்கள் விட்டு சென்ற பணிகளை நான் தொடருவேன் "- எப்படி...? வெறும் எம்.எல்.ஏ வாக இருந்து கொண்டா .....?

"தமிழகத்தை ஆசியாவின் முதல் மாநிலமாக மாற்றுவேன்.... "- ஒரு எம்.எல்.ஏ வாக இருந்து கொண்டு தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்னாலே சிரிப்பை அடக்க முடியாது. இதில் ஆசியாவில் முதல் மாநிலமாம்.... :) :) :), இவர் வேண்டுமென்றால் தி.மு.க வின் செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் போல் தனது தொகுதிக்கு ஏதாவது செய்து தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்றலாம்.....
புதிய கட்சி தொடங்க வேண்டுமா அல்லது அதிமுக படகில் ஏறி பயணம் செய்வதா என்பதில் இன்றளவும் தீபாவிடம் தெளிவான பதிலில்லை..... இன்னுமும் குழப்பத்தில் தான் உள்ளார்.... இவர் அதிமுகவில் சேர்ந்தால் அது இவரை நம்பியவர்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம்....

புதிய கட்சி தொடங்கி ஆட்சியை பிடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று..... (இவருக்கு வாக்களிப்பதை விட தேமுதிக விற்கு வாக்களிக்கலாம்.... அங்கு பிரேமலதா விசயகாந்த் அவர்களுக்கு தெரிந்துள்ள தொகுதி பிரச்சனைகள் கூட இவருக்கு தெரிய வாய்ப்பில்லை). இவர் அதிமுகவின் வாக்குகளை பிரிக்க மட்டும் தான் பயன்படுவார் மற்ற விதத்தில் இவரால் தமிழ் நாட்டிற்கு எந்த பயனுமில்லை....
சந்தர்ப்பத்திற்க்காக காத்திருப்பவனை விட, எந்தொரு செயலையும் தனக்கு சாதகமாக மாற்ற தெரிந்தவன் தான் விரைவில் இலக்கை அடைவான். தீபாவிடம் இந்த சாதுர்யம் இருப்பதாக தெரியவில்லை.....

தீபா பகல் கனவு காண்பதை விடுத்து ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்தால் கண்டிப்பாக யோசிக்கலாம்....

-பிரவின் சுந்தர் பூ.வெ.

No comments:

Post a Comment