Wednesday, February 8, 2017

Sasikala Cruel Face

சசிகலாவின் கோர முகம்
========================

தான் முதலவர் ஆக வேண்டுமென்பதற்காக கட்சியில் கிட்டத்தட்ட 43 ஆண்டு காலம் உழைத்தவர் மற்றும்   செல்வி செ. செயலலிதா அவர்களால் உண்மையான விசுவாசியாக கண்டயெடுக்கபட்ட முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் மேல் புழுதி வாரி தூற்றுவது எந்த வகையில் நியாயம்....?

 முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் தெரிவித்த அத்தனை குற்றச்சாட்டுகளும் உண்மை, அவரை முதல்வராக இருக்கும் படி வற்புறுத்தி விட்டு அவருக்கு எதிராக அமைச்சர்கள்  செயல்பட்டது நியாயமா....?

முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள், திமுகவுக்கு விலை போய் விட்டார் என்று மனசாட்சியே இல்லாமால் வசைபாடுகிறார் திருமதி சசிகலா..... சட்டமன்றத்தில் முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் திமுகவின் செயல்தலைவர் திரு ஸ்டாலின் அவர்களை பார்த்து சிரித்தார் என்பதெல்லாம் ஒரு குற்றசாட்டா ...?     அடிப்படையில் திருமதி சசிகலா அவர்களுக்கு கழக வரலாறு தெரியவில்லை போலும்....... செல்வி செ. செயலலிதா அவர்களுக்கு கலைஞர் அவர்கள் மேல் கோவம் இருந்தாலும், அவரை எதிர்த்து தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுத்தாலும், திரு ஸ்டாலின் மேல் என்றும் ஒரு சுமுக பார்வை(Soft Corner) இருந்தது, சுனாமி ஏற்பட்ட போது நிவாரண நிதி அன்று திரு ஸ்டாலின் அவர்கள் செல்வி செ.செயலலிதா அவர்களிடம் நேராக சந்தித்து தான் கொடுத்தார்.  அப்பொழுது கூட செல்வி செ.செயலலிதா அவர்கள் தந்தையின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்தார் என்று பேட்டியளித்தார்..... அன்று ஸ்டாலினோடு செல்வி செயலலிதா அவர்கள் பேசினார் என்பதற்க்காக அவருக்கும் துரோகி பட்டம் அளிப்பாரா திருமதி சசிகலா அவர்கள்...?

2016'ல் செல்வி செ.செயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவின் போது திரு ஸ்டாலின் அவர்களுக்கு பின்வரிசையில் இடமளிக்கப்பட்டது என்று திமுகவினர் கொந்தளித்த போது, அந்த பிரச்னையை பெரிது படித்த வேண்டாம் என்று பெருந்தன்மையாக  சொன்னவர் திரு ஸ்டாலின் அவர்கள், அதற்கு பின் நடந்த சட்டமன்ற கூட்ட தொடரின் போது செல்வி செ.செயலலிதா அவர்கள் திரு ஸ்டாலினுக்கு  முதலில் வணக்கம் தெரிவித்து விட்டு அன்று இருக்கை விசயத்தில் நடந்த கோளறுபடிக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதெல்லாம் தமிழக அரசியல் ஒரு ஆரோக்கியமான பாதையில் செல்வதாக அன்று எல்லோராலும் கருதப்பட்டது. செல்வி செ.செயலலிதா அவர்களின் வழிகாட்டுதலில் பயணம் செய்துவந்த முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம் சொல்லுவதோ, அவரை பார்த்து புன்முறுவல் இடுவதோ குற்றமா....? 

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி எதிர்ப்பு அரசியல் என்ற மாயை மக்களின் மேல் திணிப்பார்கள்....? காலம் மாறிவிட்டது மக்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று........ இனியும் இந்த எதிர்ப்பு அரசியல் செய்து பொழப்பு ஓட்ட முடியாது.......!

முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் திமுக ஆதரவாளர்களுக்கு எதினும் சலுகை செய்கிறார் என்று குற்றம் சாட்டினால் ஏற்றுக்கொள்ளலாம், அதை விடுத்து இந்த சாதாரண விசயத்தை பூதாகரமாக ஆக்கியது முழுக்க முழுக்க திருமதி சசிகலா தான்.....  இன்று நடக்கும் அசாதாரண நிலைக்கு இவரின் அனுபவமின்மையே காரணம்......

அதேப்போல் திரு துரைமுருகன் அவர்கள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கு என்று சொன்னதால் தான், தான் அவசர அவரசரமாக பதவியேற்க கட்சி நிர்வாகிகள் தன்னை வற்புறுத்தியாகவும் அதனால் தான் தான் முதல்வர் பதவி ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக சொல்லுவது முழு பூசிணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.... இவர்கள் திருமதி சசிகலாவை முதல்வராக்க அத்தனை காய்களையும் நகர்த்தி கொண்டு இருந்தது ஊர் அறிந்த விசயம்..... தகுந்த சூழல் இல்லாதால் பொறுமை காத்து கொண்டு இருந்தார்கள், நிலைமை முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கு சாதகமாகவே இருந்த காரணத்தால் இன்று அவர் மேல் துரோகி பட்டமளித்து வெளியேற்றி விட்டார்கள்.

 இதேபோல் ஒரு நிலைமை கடந்த தேர்தலின் போது எதிர்கட்சியினரால் பரப்ப பட்டது அப்பொழுது செல்வி செ.செயலலிதா அவர்கள் முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களை நேரில் அழைத்து பேசி அப்பொழுதே அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், மேலும் எதிர்கட்சியினரின் சதிக்கு நாங்கள் என்றும் சிக்கமாட்டோம், என்றும் திரு ஓ.பி.எஸ் அவர்கள் என் நம்பிக்கைக்கு உரியவர் என்று தெளிவாக சொன்னார். அது ஆளுமை பண்பா அல்லது எதிர்க்கட்சியில் ஒருவர் ஆதரவாக பேசினார் என்பதற்க்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 43 ஆண்டு உழைத்த ஒருவரை நீக்குவது ஆளுமை பண்பா.... சிந்திப்பீர் தோழர்களே...?

செல்வி செ. செயலலிதா அவர்கள் மரணத்தில் உள்ள மர்மம்  பற்றி உலகமே கேள்வி கேட்டது, பல வழக்குகள் நீதிமன்றத்தில் போடப்பட்டது, இதற்கும் திமுக தான் காரணமாம், இதற்கு ஒரு நீதி விசாரணை அமைக்கப்படும் என்று சொன்ன முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் பச்சை துரோகியாம்..... மடியில் கணம் இல்லையென்றால் ஏன் பயம்.....?  விசாரணையை எதிர் கொள்ளவேண்டியது தானே........

 முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கு முதல்வர் பதவியின் மேல் ஆசை வந்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.... உண்மையில் பதவி ஆசை யாருக்கு என்பது மனசாட்சி உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும்....... முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் படிப்படியாக வளர்ந்தவர். ஒரு நாளில் இந்த பதவிக்கு வந்தவர் அல்ல.....  அவர் பின்வாசல் வழியாக கட்சியை பிடிக்கவில்லை......! இன்றும் தனக்கு பொது செயலாளர் பதவி வேண்டுமென்று அவர் சொல்லவில்லை, தன்னை விட அந்த பதவிக்கு தகுதியான நபர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள், அவர்களை முறைப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறார்.....    மக்களும், அதிமுகவினரும் கேட்டு கொண்டால் மீண்டும் அம்மாவின் ஆட்சியை தொடருவேன்....... இல்லையெனில் தன் சொந்த ஊருக்கு சென்று அம்மாவிற்கு ஒரு கோவில் கட்டி அதில் சமூக சேவை செய்து கொண்டு வாழ்ந்து விடுவேன் என்றும், எக்காரணம் கொண்டும் திமுக ஆதரவு தனக்கு தேவையில்லை, மாற்று கட்சியும் தொடங்க மாட்டேன், கடைசி வரை அதிமுக தொண்டனாக தான் இருப்பேன் என்று சொல்லும் பண்ணீர் செல்வத்தின் மேல் பழி போட எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை சசிகலா விற்கு.......

"மக்களுக்காக நான், மக்களால் நான்" என்று சொன்ன புரட்சி தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் பாதையில் வந்தாக சொல்லிக்கொள்ளும் திருமதி சசிகலா  மக்களின் ஆதரவோடு தான் பதவிக்கு வந்தாரா....? தனக்குள்ள மக்கள் ஆதரவு நிரூபித்து காட்டி விட்டு பின் தலைமை பொறுப்பு ஏற்கலாமே.......  ஏன் இப்படி பின்வாசல் வழியாக ஆட்சியையும் கட்சியையும் பிடித்து விட்டு, தனக்கு பதவி ஆசையில்லை என்று சொல்லுவது தமிழ் நாட்டு முட்டாள் ஆக்கும் செயலல்லவா........  உண்மையில் இவருக்கு மக்கள் / எம்.எல்.ஏ கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏன் நேற்று முதல் அவர்களை பேருந்தில் கடத்தி கொண்டு சென்றார்...... அவர்களை ஏன் மறைத்து வைத்துள்ளார் இது முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்கள் சொன்ன நிர்பந்திப்பது அல்லவா........... ?  அமைச்சர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப விட்டு வேண்டியது தானே.......

தான் பதவி சுகத்தை அனுபவிக்க யாரை வேண்டுமென்றாலும் இழக்க கூடியவர்,  இவருக்கு முத்த நிர்வாகிகள்/ உறுப்பினர்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லை தனக்கு தெரிந்தது எல்லாம் தனக்கு கட்டுப்பட்டவர்கள் விசுவாசி, கட்டுப்படாதவர்கள் துரோகிகள் அவ்வளவே.........

-பிரவின் சுந்தர் பூ.வெ.

No comments:

Post a Comment