Monday, November 9, 2015

deepavali wishes


இருளென நம் வாழ்வில் குடி கொண்டிருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு உட்பகைகளும், ஆணவம் கன்மம் மாயை  என்ற மும்மலங்களுள் விலகி  சகிப்புத்தன்மை, பொறுமை, மன அமைதி , மனிதாபிமானாம் என்னும் ஒளி பெருகி என்றும்  நம் வாழ்வில் நிம்மதி நிலைத்து இருக்கட்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

- பிரவின் சுந்தர் பு.வெ

Wednesday, November 4, 2015

இடஒதுக்கீட்டுக் கொள்கை



 சமுகத்தை முன்னேற்றப் பெரியார் நம்பியது இட ஒதுக்கிட்டுக் கொள்கையை! அது நீதிக் கட்சியின் கொள்கை. அந்தக் கொள்கையில் அவர் கொண்ட மையலின் காரணமாக, அவர் காந்தியையும், விடுதலைப் போராட்டத்தையும்  கூடக் கை விட்டார்! அந்த கொள்கை கல்வி மற்றும் அரசு அலுவல் வாய்ப்புகளைக் கீழ்நோக்கிப் பரவச் செய்தது என்பது உண்மை தான். ஆனால், கடந்த 90 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு சாதியிலும் உச்ச அளவாக பத்துப் பதினைந்து விழிக்காடு மக்களே முன்னேற்றமடைந்தனர். ஒவ்வொரு சாதியிலும் உள்ள பெருவாரியான மக்களின் வழியை அந்தந்தச் சாதிகளில் ஏற்கனவே இந்தக் கொள்கையால் முன்னேற்றம் அடைந்து விட்ட பத்துப் பதினைந்து விழிக்காட்டினரே அடைத்துக் கொண்டு நிற்கின்றனர்.  சாதிவாரிப் புள்ளி விவரம் கோருகிற சாதிக் கட்சிகள், ஒவ்வொரு சாதியிலும் தொடர்ந்து முன்னேறுவோரின் புள்ளி விவரத்தையும்,  முன்னேறவே முடியாதவர்களின் புள்ளி விவரங்களையும் கோருவதில்லையே ஏன்..?

மருத்துவர் மகன் மருத்துவனாகிறான்; பொறியாளர் மகன் பொறியாளராகிறான்; நிதிபதி மகன் நிதிபதியாகிறான். அதே சாதியைச் சேர்ந்த பனை ஏறுகிறவன் மகன் இன்னும் பனை ஏறிக்கொண்டு தானே இருக்கிறான்! அவன் எப்போது மாவட்ட ஆட்சியர் ஆவான்? அவனை மறித்துக் கொண்டு நிற்பவன் யார்? அவன் சாதியிலுள்ள வசதி மிக்கவன் தானே!

1920-ல் பிற்பட்டவனின் இடத்தைப் பார்ப்பனன் அடைத்துக் கொண்டிருந்தான்! இப்போது அடைத்துக் கொண்டிருப்பது யார்..?  ஒரு சாதியின் பெயரால் இட ஒதுக்கீடு பெற்று மருத்துவனாகப் பெற்றவன் பொதுப்பட்டியலுக்குப் போனால்தானே,  அதே சாதியை சேர்ந்த இன்னொருவன் அந்த இடத்திற்கு வர முடியும்..

பழைய காலத்தில் இருந்த சாதியமைப்புக்களில் ஒவ்வொரு சாதியும் தன்னை மேல் நிலைக்குத் தூக்கிக் கொள்ளப் போராடியது! இப்போது ஒவ்வொரு சாதியும் தன்னைக் கீழ்நிலைக்கு இறக்கிக்கொள்ளப் போராடுகின்றது! பிற்பட்டவன் மிகவும் பிற்பட்டவனாக விரும்புகிறான்; மிகவும்   பிற்பட்டவனோ தாழ்த்தப்பட்ட சாதியினரோடு சேர்த்து அறிவிக்கக் கோருகிறான்! முன்பு சமூக  மதிப்பைப் பெறத் தன்னுடைய சாதியை உயர்த்திக் கொள்ள நினைத்தார்கள்! இப்போது அரசு சலுகை பெறத் தாழ்த்திக் கொள்ள நினைக்கிறார்கள்!  

இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரு வழியில் நல்ல கொள்கை தான்! ஆனால் வாய்ப்புப் பெற்று ஏற்றம் பெற்றவன் ஒவ்வொருவனும் தொடர்ந்து அடுத்தடுத்துத் தன்னுடயை மகனையும், பிறகு பேரனையும் வரிசையில் முன்னிறுத்தி, வரிசையை விட்டு அகலாமல் அடைகாத்துக் கொண்டிருக்கிறானே! வரிசையின் பின்னால் இருப்பவன் எப்போது முன்னால் வர முடியும்? அடைந்தவனே பயனை அடைந்து கொண்டிருந்தால், அடையாதவன் அடைவது எப்போது?

இட ஒதுக்கீட்டுக் கொள்கையும், சாதி ஒழிப்புக் கொள்கையும் ஒரே நுகத்தடியின் இணைக்காளைகளாக இருக்க முடியாது! கடந்த 90 ஆண்டுகளாக அந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்தி, பத்து இருபது விழிக்காட்டினர் தான் நன்மை பெற்றிருக்கின்றனர்.

தொண்ணூறு ஆண்டுகள் என்பது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு தானே! 1919-ல் லெனின் நடைமுறைப்படுத்திய வர்க்க பேதமற்ற கொள்கை, உலகில் பாதியைச் சிவப்பாக்கி, ஒரு குறிப்பட்ட காலத்திற்குள் இற்றுப் போயிருந்த சார் மன்னினின் ருசியாவை அமெரிக்காவுக்கு நிகிரான  வல்லரசாக்கிவிட்டு, 70 ஆண்டுகளில் முடிந்தும் போய்விட்டதே!

இந்த இடஒதுக்கீட்டுக்  கொள்கை ஏற்றமிகு கொள்கை என்றால் இந்த தொண்ணூறு ஆண்டுகளில் தொண்ணூறு விழிக்காட்டினரை முன்னேற்றி இருக்க வேண்டாமா? இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இருபது விழிக்காட்டினர், தாங்கள் அடைத்துக் கொண்டிருக்கிற வழியைத் தம்தம் சாதியினருக்குத் திறந்து விட போவதில்லை! இதை எந்த சாதியில் உள்ள ஏழையும் அறிவதில்லை என்பது தான் சோகம்.

- (துக்ளக் 9-12-09, 16-12-2009) பதிப்புகளில் "இவர்கள் சாதியை ஒழிக்கிறார்களாம்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை.....  மற்றும் திரு பழ. கருப்பையா  அவர்கள் எழுதிய கருணாநிதி என்ன கடவுளா என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது

Thursday, October 29, 2015

கிழக்கும் மேற்கும்


ஒன்றைப் புரிந்து கொள். மனிதன் சட்டங்களை உருவாக்குகிறானா அல்லது சட்டங்கள் மனிதனை உருவாக்குகிறதா? மனிதன் பணத்தை உருவாக்குகிறானா, பணம் மனிதனை உருவாக்குகிறதா? மனிதன் பெயரையும் புகழையும் உருவாக்குகிறானா, பெயரும் புகழும் மனிதனை உருவாக்குகிறதா?

முதலில் மனிதனாகு. அப்போது பிற எல்லாம் தாமாகவே உன்னை தேடி வருவதைக் காண்பாய். தெரு நாயைப்போல் உறுமிக்கொண்டு சண்டையிடுவதை விட்டு விடு. நல்ல நோக்கம், நேரிய வழி, தர்ம வீரம், நல்ல வலிமை ஆகியவற்றைப் பெறு.  மனிதனாக பிறந்த நீ ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல். நீ இந்த உலகத்தில் பிறந்த போது உலகம் சிரித்தது, நீ அழுதாய். நீ உலகை விட்டுச் செல்லும் போது நீ சிரிக்க உலகம் உனக்காக அழத்தக்க நல்ல காரியங்களைச் செய். இதைச் சாதிக்க முடிந்தால் நீ மனிதன். இல்லையேல் நீ பிறந்தும் பயனில்லை. 

- வங்காளப் பத்திரிகையான உத்போதனுக்காக "கிழக்கும் மேற்கும் " என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் எழுதிய   கட்டுரையில் ஒரு பகுதி.....

zakath


 
நபிகள் அவர்கள் இசுலாத்திற்கு விதித்த மூன்றாவது கடமை zakath(தானம் வழங்கல்)!. தன்னுடைய வருவாயில் குறைந்தது நாற்பதில் ஒரு பங்கை அல்லது 2.5 விழிக்காட்டைத் தானமாக இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதைக் குரான் கடமையாக்குகிறது! எல்லாருக்கும் இயலக்கூடிய குறைவான பங்கு இது! வரி எவ்வாறு தவிர்க்க இயலாததோ, அதே போல் இதுவும் தவிர்க்க இயலாதது....

ஒருவன் நபிகள் பெருமானாரிடம் சொல்கிறான்: "நான் இசுலாத்தில் நம்பிக்கை உள்ளவன்; ஒரே கடவுளான அல்லாவையும், இறைத்தூதரான முகம்மதுவையும் ஏற்றிருப்பவன்; மேலும் ஐந்து நேரம் தொழுபவன்!"

பெருமானார் கேட்கிறார்: zakath கொடுக்கிறாயா?

அவன் சொல்கிறான்: " அதனாலென்ன? நான் எந்தத் தப்பும் செய்ததில்லையே!"

பெருமானார் சொல்கிறார்: "எந்த பயனும்மில்லை!"

இறைவனின் இயல்புகளைச் சொல்லி அவனுக்குப் புகழ் மாலைகளைச் சூட்டி அவனை நமக்கு அறிமுகப்படுத்துவதில் திருக்குரான் நிகரில்லாச் சிறப்புடையது! இறைவனின் ஒரு தன்மை, 'Master of the Day of Recompense' என்பது! அவன் தீர்ப்பு நாளுக்கு அதிபதி! தீர்ப்பு நாள் என்பது உயிர்கள் உடல்களை நீத்து விட்ட பிறகு, ஒரு நாளில் இறைவனால் எழுப்பப்பட்டு அவற்றின் வரவு செலவுகள் விசாரிக்கப்படும் நாள்! நல்லதுக்கு நல்லதையும், கெட்டதுக்கும் கெட்டதையும் வெகுமதியாகவும் தண்டனையாகவும் வழங்கும் நாள் அது!...

இந்தியச் சமயங்கள் செய்த வினைகளுக்கேற்றவாறு மறுபிறப்பு என்று வலியுறுத்துவது போல், மேற்காசியச் சமயங்களான கிறித்துவம், இசுலாம், யுதம் ஆகியவை தீர்ப்பு நாளை வலியுறுத்துகின்றன! தீர்ப்பு நாளில் ஒருவன் செய்த நல்ல, தீய செயல்களுக்கு ஏற்றவாறு வெகுமதியோ, தண்டனையோ இருக்கும் என்பது புரிந்துகொள்ளத் தக்கது தான்!

ஆனால் இதற்கும் ஒரு படி மேலே செல்கிறது குரான்! செய்யும் வசதி இருந்தும் செய்யத் தவறிய செயல்களுக்கும் தண்டனை உண்டு என்னும் குரானின் எச்சரிக்கை தனித்தன்மை வாய்ந்தது என்பது மட்டுமில்லை; அழகியவற்றுளெல்லாம் அழகியது!

உங்களுக்குத் தீர்ப்பு வழக்கப்படப்போவது நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் அல்ல! இவ்வளவு சொத்து வைத்திருந்தும், உங்கள் பக்கத்தில் அனாதைகள் இருப்பதை அறிந்திருந்தும், ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்னும் கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்கிறார் நபிகள் நாயகம்!

செய்த தீவினைக்குத் தண்டனை உண்டு என்று அறிந்திருக்கிறோம்! செய்யத் தவறிய கடமைக்கும் தண்டனை உண்டு என்பது சிந்தனைப் புதுமை! ஒரு வறியவனிடம், வயிற்றுக்கு இல்லாதவனிடம் ஒரு செல்வன் பாராமுகமாக நடந்து கொள்வதைத் தீர்ப்பு நாளை சுட்டிக் காட்டித் திருக்குரான் அச்சுறுத்துவது அழகியவற்றுளெல்லாம் அழகியது!

இசுலாம் என்பது 'இறைவனிடம் முழு ஒப்படைப்பு' என்கிறார்கள்; இசுலாம் என்பதே ' ஏழைகளின் பசியாற்றல் தானோ' என்று எண்ணத் தோன்றுகிறது!

- துக்ளக், 01-09-10.

Sunday, September 13, 2015

Secret of Religion

மதத்தின் இரகசியம் கொள்கையில் இல்லை,
செயல்முறையில் தான் உள்ளது.
நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது
-- இது தான் மதத்தின் முழுப்பரிமாணம்.

- சுவாமி விவேகானந்தர்.  

Saturday, September 12, 2015

who is sathu

உத்தவர், சாதுக்களின் இலக்கணம் என்ன என்று கேட்டதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீழ்கண்ட வாறு விடையளிக்கிறார். 

சாது என்னும் ஞானி, அனைத்து சீவராசிகளிடம் தயை (கருணை) உடையவன்; நன்றி மறவாதவன்; உடல் துன்பங்களைப் பொறுத்துக் கொள்பவன்; மாசு படாத மனம் உடையவன்: அனைவரிடம் சமமாக இருப்பவன்; எல்லோருக்கும் உதவி செய்பவன்; வெறுப்பு - விருப்பங்கள் அற்றவன்; தூய்மை உடையவன்; நிலையான மதி கொண்டவன்; அளவாக உண்பவன்; புலன்களை கட்டுப்படுத்தியவன்; அமைதியுடன் இருப்பவன்; மனத் தடுமாற்றம் அடையாதவன்; கம்பீரமும், தைரியமும் உடையவன்; காமம், குரோதம், லோபம், மோகம், மதம், ஆச்சரியங்களை பொருட்படுத்தாதவன். பிறரை வாழ்த்துபவன்; திறமை, நட்பு, கருணை, தெள்ளிய ஞானம் உடையவன்.

Wednesday, September 9, 2015

WSPD

 உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்: செப். 10


தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாகக்  காணப்படுகின்ற  மிகவும்  குறைவாக மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனையாகும்.  பிற பிரச்சனைகள் போல இதற்கு  முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.  நோய், விபத்துக்கள்,போர்கள் இவற்றால்  இறப்பவர்களுக்குச் சமனாக அல்லது அதற்கும் அதிகமாகத்   தற்கொலையினால் தற்பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இதயநோய், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் - போன்ற நோய்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க உலக அளவில் ஒரு நாளைத்  தேர்ந்தெடுத்து இருப்பதுப்போல ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாள் World Suicide Prevention Day (WSPD)  தற்கொலை தடுப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு ஆண்டும் "தற்கொலையைத்  தடுப்போம்"," நம்பிக்கையை விதைத்து உயிர்களைக் காப்போம்","விரிவாகச்  சிந்திப்போம், நாட்டளவில்  திட்டமிடுவோம், ஊர்களில் செயல்படுத்துவோம் ", "பலதரப்பட்ட கலாச்சாரங்களில் தற்கொலை தடுப்பு", "குடும்பங்கள், அமைப்புகள், தற்கொலைகள் "," உலகளாவிய  அளவில் நம்பிக்கை ஒளி ஏற்றி தற்காப்புகளை பலப்படுத்துவோம்" போன்ற பலபல தலைப்புகளில் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை தடுப்பு அகில உலக அமைப்பு.  

உலகில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். நாள் ஒன்றுக்கு 3,000 பேர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இப்படி மடிகின்றனர். 15 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் இறந்து போவதற்கான காரணங்களில் தற்கொலை இரண்டாவது காரணமாக இருக்கிறது.

நம் நாட்டில் லட்சத்துக்கு 16 பேர் தற்கொலையால் இறக்கின்றனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 3 % தற்கொலைகள். இதில் 40 % பேர் ஆண்கள், 60 % பேர் பெண்கள்.

ஏன் இந்த எண்ணம்?

அதிகார நாட்டம், பேராசை, சுயநலம், பொறாமை, பொறுமையின்மை, சிந்தித்துச் செயல்படாமை, மூடநம்பிக்கை, உணர்ச்சி வசப்பட்டு செயல்படல்,  ஓய்வின்மை, தெளிவின்மை, இலக்கின்மை,  சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் இன்மை, தன்னம்பிக்கை யின்மை, உள்ள உறுதியின்மை, தோல்வியில் துவளல், சோதனைகளை எதிர்கொள்ளும் திடமின்மை, விடாமுயற்சியின்மை, விமர்சனங்களுக்கு அஞ்சுவது, இழப்பைத் தாங்கும் உறுதியின்மை போன்றவை ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது என்று .  பிரச்சினைக்குத்  தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது  ஏழைக்குப்  பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை.  பெற்ற மக்களால்  சிலருக்குப் பிரச்சினை ; மக்களைப்  பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள் சிலருக்கு .ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது.நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாகச்  சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. Imipramine receptors  என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது இவை குறைவாக இருப்பது  தெரியவந்துள்ளது. செரடோனின் சுரத்தலைத்  தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணத்தைக்  குறைக்கலாமாம்.

காரணங்கள்

இன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை  தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர்.  காதல் தோல்வியோ தேர்வில் தோல்வியோ  மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைத்தான்.மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம். நூறு சதவிகித தேர்ச்சிக்காகப்  பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன .கல்விக் கூடங்களில் தோல்வியைத்  தைரியமாக எதிர்கொள்வது குறித்த  எதார்த்தத்தைக்  கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்குக்  காரணம்.கல்விக் கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

வறுமை, பெரும் கடன் சுமைகளின் காரணமாகத்  தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாகத்  தலையீடு செய்து, தொடரும் இந்த அவல நிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

பாலியல் வன்முறையால் இந்த முடிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவரும் இந்த நாளில் தக்க பாதுகாப்பு அவர்களுக்குத்  தரவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

தடுப்பு நாள்

தற்கொலைகளைத் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேசத் தற்கொலை தடுப்புக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதியை உலகத் தற்கொலை தடுப்பு நாளாக அனுசரித்து வருகின்றன. 2003 முதல் இது அனுசரிக்கப்படுகிறது.

இந்த 12வது உலகத் தற்கொலை தடுப்பு நாளின் மையக் கருத்து ‘தற்கொலைத் தடுப்பில் ஒருங்கிணைந்த செயலாக்கம்'.

நம் பங்கு

தற்கொலை முயற்சி செய்பவர்கள் எல்லோரும் மன வளர்ச்சி குறைந்தவர்கள் அல்ல.நல்ல மன நலம் உள்ளவர்களும் கூட, தாங்கள் அனுபவித்து வரும் துக்கத்திலிருந்து, அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற தற்கொலையை எளிமையான வழி என்று நினைக்கிறார்கள்.இது கொடுமையான மூர்க்கத்தனமான செயலாகும்.இது சுய நலத்தின் உச்சம். தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள்  தள்ளுகிறது. இது கோழைத்தனமான முடிவு என்று சொல்கிறோம். ஆனால் தற்கொலை செய்துகொள்ள தைரியம் வேண்டும்.

தற்கொலைக்கு முயல்பவர்கள் கட்டாயமாக அது பற்றித்  தன் நெருங்கிய தோழர்களிடம் -  “நான் இறந்திருக்கலாம்” என்றோ “நான் போன பிறகுதான் என் அருமை புரியும்” என்பது போலவோ இவர்கள் பேசத் துவங்குகிறார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  மன வலியிலிருந்து மீள வேறு வழி இருப்பது தெரிந்தால் தற்கொலை முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் வாழவே விரும்புவார்கள் என்பதே உண்மை.

தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு நாம்  எப்படி உதவலாம்?

    அவர்கள் தங்கள் துக்கத்தையோ ஏமாற்றத்தையோ வெளியிடும் போது விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள்.தனக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும்.

    அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள்.  அவரது ரகசியம் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படாது என்றும்  எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது என்றும் நம்பிக்கையும் உத்திரவாதமும்  கொடுங்கள்.

    அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை வெளிப் படுத்துங்கள். உங்கள் கனிவும் கருணையும் நிறைந்த சொற்கள் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.

    முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள்.

ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா?இது போன்றவைகளின்  வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.

மேற்கூறிய முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால் கவுன்சிலிங் தரும் அமைப்புகளை நாடுங்கள்.

சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற   ஊடகங்கள் தற்கொலை நிகழ்வுகளை  வெளிச்சம் போட்டு காட்டாமல் மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக உதவ வேண்டும்.

தமிழகத்தில் மனநோய்களுக்கான மருத்துவச் சிகிச்சை நடமாடும் மாவட்ட மனநலத் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே மனநல மாற்றம் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணத்தைத் தடுக்க உரிய மருந்துகளை இலவசமாகப் பெறலாம்.

மேலும் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 104 மருத்துவ ஆலோசனை உதவி எண் மூலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெளிவு பெற முடியும். சமூகத்தில் நடக்கும் தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஒரு சமூகமாக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.

தனிமைப்பட்டு இருப்பவர்களிடம்தான் அதிகமான தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளைப் பெருமளவு தடுக்க முடியும்.

 தற்கொலையில் வெற்றிபெறாமல் காப்பாற்றப் பட்டவர்களின் நிலை, முந்தியதைக்காடிலும் பரிதாபமானது - சமூகத்திலும் குடும்பத்திலும், மற்றவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய அவலம்.

தற்கொலை இல்லாத  சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான்.“அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிது”.இயற்கையில் மலர்வதும் உதிர்வதும் யதார்த்தமென்றால்  பிறப்பதும் இறப்பதும் இயற்கையாகவே  நிகழவேண்டுமல்லவா? இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம்.

தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, சுயநலம், என தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிட்டு  மற்ற மனிதர்களோடு இணங்கி, அவர்களையும் நம்மைப்போலவே எண்ணி, மதித்து, மற்றவர்களையும் வாழ்வித்து நாமும் வாழ்வோம்.வாழ்வது ஒரு முறைதான். வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.

இலவச உளவியல் ஆலோசனை

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின்  தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060 நேரடியாக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028

மின்னஞ்சல் தொடர்புகொள்ள: help@snehaindia.org

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, இணணய முகவரி: www.maitreyi.org.in  நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அணுகலாம். முகவரி: 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

மற்ற மாநிலங்களில் உள்ள தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை மையங்கள்.

மாநிலம்: தெலங்கான


ROSHNI
1-8-303/48/21 Kalavathy Nivas,
Sindhi Colony
S.P. Road
SECUNDERABAD – 500003
Andhra Pradesh
Contact by: Face to Face  – Phone  – Letter: 
Helpline 1: 9166202000
Helpline 2: 9127848584
Email Helpline: help@roshnihyd.org


மாநிலம்: குஜராத்

Saath
B12 Nilamber Complex
H.L. Commerce College Road
Navrangpura
AHMEDABAD-380 006
Gujarat
Helpline 1: +91 79 2630 5544
Helpline 2: +91 79 2630 0222


மாநிலம்: கேரளா

MAITHRI – Cochin
ICTA – Santigram
Changampuzha Nagar (P.O.)
Kalamassery, Ernakulam
Kochi– 682033
KERALA

Helpline 1: +91 (0)484 2540530
Website: www.maithrikochi.org


மாநிலம்: மகாராஷ்ட

The Samaritans, Helpline
c/o Lowjee Wadia Trust
Riddhi Siddhi CHS, Next to Lal Baug Police Chowky
Dr. B. Ambedkar Road, Parel
MUMBAI –400 012
Maharashtra
Helpline 1: +91-22-32473267
Website: www.mumbainet.com/health/samarita.htm
Opening hours: Mon, Tues, Wed, Thurs, Fri: 15:00 – 21:00


AASRA
104, Sunrise Arcade
Plot 100, Sector 16
Koparkhairane
NAVI MUMBAI –400 701
Maharashtra
Helpline 1: +91 22 2754 6669
Website: www.aasra.info

மாநிலம்  : புது டெல்லி

Sumaitri
1 Bhagwandas Lane
Aradhana Hostel Complex
Basement
NEW DELHI – 110 001
Helpline 1: 2338 9090
Website: www.sumaitri.org
Opening hours: Mon, Tues, Wed, Thurs, Fri: 14:00 – 22:00

மாநிலம்  : மேற்கு வங்காளம்

Lifeline Foundation
KOLKATA
West Bengal
Helpline 1: +91 2463 7401/7432
Helpline 2: +91 2474 5886
Website: www.lifelinekolkata.org
Email Helpline: reach@lifelinekolkata.org


மாநிலம்  : கர்நாடக

SAHAI
47 Pottery Road
Frazer Town
Bangalore – 560005
Karnataka
Contact by: 2549 7777
Website: www.mpa.org.in

Monday, August 3, 2015

Trust your hands

உதவி இல்லையே என்று ஏங்குவது மிகப்பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாதீர்கள். நாமே நமக்கு உதவி. நமக்கு நாமே உதவ முடியாவிட்டால், வேறு யாரும் உதவ முடியாது. உனக்கு ஒரே நண்பன் நீயே; ஒரே பகைவனும் நீயே; எனக்கு என்னைத்தவிர வேறு பகைவனும் இல்லை; நண்பனும் இல்லை!'- (6.5)

Tuesday, July 21, 2015

Godavari Maha Pushkaram


இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.

கோதாவரி ஆறு- இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தபடியாக நாட்டின் மிகப்பெரிய நதி கோதாவரி. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரியம்மகேஷ்வர் பகுதியில் பிரம்மம் கிரி மலையில் தொடங்கும் கோதாவரி, தெலங்கானா மாநிலத்தின் தர்மபுரி, காலேஷ்வரம், பாசரா, பத்ராசலம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆந்திர மாநிலத்தில் நுழைந்து, மேற்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ராஜமுந்திரி, நரசாபுரம், கொவ்வூரு, அந்தர்வேதி வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கோதாவரி நதியில் ராஜமுந்திரி அருகே பாபி கொண்டலு எனும் இடத்தில் பல்வேறு துணை நதிகள் கலக்கின்றன. அதன் பிறகு அகண்ட கோதாவரி நதியாக வங்கக் கடலில் கலக்கிறது. பூர்ணா (தெற்கு), ப்ரவரா, இந்திராவதி, மஞ்சிரா, பிந்துசார, சபரி வைன்கங்கா மற்றும் வார்த ஆறுகள் கோதாவரியின் கிளை ஆறுகளாகும்.

பகீரதனின் முயற்சியால் பூமிக்கு வந்த கங்கை நதி திரேதா யுகத்தை சேர்ந்ததாகும். ஆனால் சுமார் 1,465 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் கோதாவரி, அதற்கு முந்தைய கிரேதா யுகத்தைச் சேர்ந்த புண்ணிய நதி என கூறப்படுகிறது. வனவாசம் சென்ற ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் கோதாவரி நதிக்கரையில் சில நாட்கள் தங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கோதாவரி நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும்.  இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாட படுகிறது.

 மேலும் 144 வருடங்களுக்கு ஒரு முறை மஹா புஷ்கரம் கொண்டாப்படுகிறது. ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் 1857 ஆம் ஆண்டு இந்த மஹா புஷ்கரம் கோதாவரியில் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு இந்த ஆண்டு (2015) கோதாவரி ஆற்றில் மகாபுஷ்கரம் கொண்டாடப்படுகிறது இது ஜூலை 14 முதல் 25 வரை கொண்டாடப்படுகிறது. இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.அடுத்த மஹா புஷ்கரம் கோதாவரி ஆற்றில் வரும் 2159 ஆண்டு கொண்டாப்படும்.

ஆந்திரா, தெலுங்கானா, மராட்டிய மாநிலத்தில் கோதாவரி புஷ்கரம் நடைபெறும் கோவில்கள் வருமாறு:–
-----------------------------------------------------------

பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).

Monday, July 20, 2015

What is Karma Yoga

What is Karma-Yoga..?

Even at the point of death to help any one, without asking questions. Be cheated millions of times and never ask a question, and never think of what you are doing. Never vaunt of your gifts to the poor or expect their gratitude, but rather be grateful to them for giving you the occasion of practicing charity to them. Thus it is plain that to be an ideal householder is a much more difficult task than to be an ideal Sannyasin; the true life of work is indeed as hard as, if not harder than, the equally true life of renunciation.

கர்மயோகம் என்றால் என்ன?

சாகின்ற நிலையிலும் கூட கேள்வி எதுவும் கேட்காமல் ஒருவருக்கு உதவி செய்வது தான் கர்மயோகம், கோடி முறை நீங்கள் ஏமாற்றப் பட்டாலும் அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள், ஏழைகளுக்குச் செய்யும் உதவி பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் உங்களிடம் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் மாறாக நீங்கள் உதவி செய்வதற்கான வாய்ப்பைத் தந்ததற்காக அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். ஒரு லட்சிய இல்லறத் தானாக இருப்பது ஒரு லட்சியத் துறவியாக இருப்பதை விடக் கடினம் என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். உண்மையான கர்மயோகம் உண்மையான துறவு வாழ்வைவிடக் கடினமான தில்லை என்றாலும், நிச்சயமாக, துறவு வாழ்விற்கு ஈடான கடுமை நிறைந்ததே.............

- சுவாமி விவேகானந்தர்


Sunday, July 12, 2015

Power of Self Sacrifice


முழுமையான தன்னல மறுப்பைக் கீழ்வரும் கதை விவரிக்கிறது; குருஷேத்திரப் போருக்குப் பிறகு, பாண்டவ சகோதரர்கள் ஐவரும் பெரிய யாகம் ஒன்றை நடத்தினார்கள். அதில் ஏழைகளுக்கு மிகுந்த அளவில் தானம் அளிக்கப்பட்டது. எல்லோரும் அந்த யாகததின் சிறப்பையும் பெருமையையும் கண்டு வியந்து அத்தகைய ஒரு யாகத்தை இதுவரை உலகம் கண்டதில்லை என்று பாராட்டினர். யாகம் நிறைவுற்ற பின்னர் அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் உடம்பில் ஒரு பகுதி பொன்னாகவும் மற்றப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருந்தது உள்ளே நுழைந்த அது யாக மண்டபத்தில் விழுந்து புரண்டது. பின்னர் எல்லோரையும் பார்த்து, நீங்கள் எல்லோரும் பொய்யர்கள் இது யாகமே அல்ல என்று கூறியது கேட்டவர்கள் திகைத்தார்கள் என்ன இது யாகம் அல்ல என்றா சொல்கிறாய் எவ்வளவு பொன்னும் பொருளும் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா? எல்லோருக்கும் செல்வந்தர்களாகி மகிழ்ச்சியில் திளைக்கின்றனரே இதுவரை மனிதன் செய்தவற்றுள் மிக அற்புதமான யாகம் இது என்றனர்.

அதற்குக் கீரிப்பிள்ளை கூறியது: முன்பொரு முறை  சிறிய கிராமம் ஒன்றில் பிராமணர் ஒருவர் தன் மனைவி மகன் மற்றும் மருமகளோடு வாழ்ந்து வந்தார். அவர்கள் மிகவும் ஏழைகள் பிறருக்குப் படிப்பும் சாஸ்திரமும் சொல்லித் தந்து அதனால் கிடைக்கும் மிகக் குறைந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள் ஒரு முறை அந்த நாட்டில் மூன்று வருடங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. முன்பு எப்போதையும் விட அந்தப் பிராமணக் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகியது. பல நாட்கள் பட்டினியில் கழிந்தன அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் காலையில் அந்தப் பிராமணருக்கு பார்லி மாவு கிடைத்தது. அதைப் பக்குவம் செய்து பங்கிட்டு நால்வரும் உண்ணத்தொடங்கினார். அந்த வேளையில் அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது பிராமணர் கதவைத் திறந்தார் எதிரே விருந்தினர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இந்தியாவில் விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்கு உரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும். எனவே அந்த ஏழைப் பிராமணர் விருந்தாளியை அன்போடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் தன் பங்கு உணவை அந்த விருந்தாளிக்குக் கொடுத்துச் சாப்பிடும் படி உபசரித்தார். வந்தவரோ கணநேரத்தில் மாவு முழுவதையும் சாப்பிட்டுவிட்டு, ஐயோ நீங்கள் என்னைக் கொல்கிறீர்களே! பத்து நாட்களாக நான் பட்டினிகிடக்கிறேன் . இந்தச் சொற்ப உணவு என் பசியைத் தூண்டி அல்லவா விட்டுவிட்டது என்று கதறினார். உடனே அந்தப் பிராமணரின் மனைவி கணவரிடம் என் பங்கை அவருக்குக் கொடுங்கள் என்று கூறினாள். பிராமணரோ வேண்டாம் என்றார். அதற்கு அவள் வந்திருப்பவர் ஏழை வீட்டிற்கு வந்த விருந்தினரின் பசியைப் போக்கி உபசரிப்பது இல்லறத்தார்களாகிய நமது கடமை அவருக்குத் தர உங்களிடம் ஒன்றும் இல்லாதபோது என்னிடம் இருப்பதைக் கொடுக்க வேண்டியது மனைவியாகிய என் கடமை என்று கூறித்தன் பங்கை அந்த விருந்தாளியின் பசி தீரவில்லை அவர் துடித்தார். இதைப் பார்த்த அந்தப் பிராமணரின் மகன் தந்தையின் பாரத்தைச் சுமப்பதில் உதவ வேண்டியது மகனின் கடமை இதோ எடுத்து கொள்ளுங்கள் என்று தன் பங்கையும் கொடுத்தான்.அப்படியும் விருந்தாளியின் பசி அடங்க வில்லை. அவர் மிகுந்த வேதனைப்பட்டார் இதைக் கண்ட அந்த மகனுடைய மனைவி தன் பங்கையும் கொடுத்தாள். அதை உண்டபின் அவரது பசி தீர்ந்தது அவர்களை வாழ்த்தி விடைபெற்றார். அந்த விருந்தாளி ஆனால் வீட்டிலுள்ள நால்வரும் பசியின் கொடுமையால் அன்றிரவே இறந்து போனார்கள்,

அந்த மாவில் கொஞ்சம் அங்கே தரையில் சிந்தியிருந்தது. நான் அந்த மாவின் மீது புரண்டபோது என் பாதி உடம்பு பொன்னாகியது. அதை நீங்கள் இதோ பார்க்கிறீர்கள். அது போன்ற யாகம் எங்காவது நடைபெறுகிறதா என்று அன்றிலிருந்து நான் உலகம் முழுவதும் தேடுகிறேன். ஆனால் எங்கேயும் காண முடியவில்லை என் மீதி உடல் பொன்னாகவும் இல்லை அதனால் தான் இது யாகமே இல்லை என்கிறேன்.

தானம் பற்றிய இந்தக் கருத்து இப்போது இந்தியாவிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. மாமனிதர்கள் குறைந்து வருகிறார்கள். நான் முதன் முதலில் ஆங்கிலம் கற்றுக் கொண்டபோது கடமையுணர்வு கொண்ட ஒரு சிறுவனைப் பற்றிய ஆங்கிலக் கதையொன்றைப் படித்தேன் . தான் வேலை செய்து பெற்றுவந்த கூலியில் சிறு தொகையைத் தன் தாய்க்குக் கொடுத்தான் அவன். இதைப் புகழ்ந்து நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அது என்ன பிரமாதமோ! இந்தச் சிறுவன் ஒருவனுக்கு இந்தக் கதையின் நீதி புரியவே புரியாது. தனக்காகவே ஒவ்வொருவனும் என்ற மேலை நாட்டுக் கருத்தை அறிந்த பின்னரே இப்போது அந்தக் கதை எனக்குப் புரிகிறது. சிலரோ அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டு தாய் தந்தை மனைவி மக்களைக்கூடத் தவிக்கும் படி விட்டுவிடுகிறார்கள் இல்லறத்தானின் லட்சியம் ஒரு போதும் ஓரிடத்திலும் இதுவாக இருக்கக் கூடாது.


----------------------------------English Version---------------------------------------------------------------

This idea of complete self-sacrifice is illustrated in the following story: After the battle of Kurukshetra the five Pândava brothers performed a great sacrifice and made very large gifts to the poor. All people expressed amazement at the greatness and richness of the sacrifice, and said that such a sacrifice the world had never seen before.

But, after the ceremony, there came a little mongoose, half of whose body was golden, and the other half brown; and he began to roll on the floor of the sacrificial hall. He said to those around, "You are all liars; this is no sacrifice." "What!" they exclaimed, "you say this is no sacrifice; do you not know how money and jewels were poured out to the poor and every one became rich and happy? This was the most wonderful sacrifice any man ever performed." But the mongoose said, "There was once a little village, and in it there dwelt a poor Brahmin with his wife, his son, and his son's wife. They were very poor and lived on small gifts made to them for preaching and teaching. There came in that land a three years' famine, and the poor Brahmin suffered more than ever. At last when the family had starved for days, the father brought home one morning a little barley flour, which he had been fortunate enough to obtain, and he divided it into four parts, one for each member of the family. They prepared it for their meal, and just as they were about to eat, there was a knock at the door. The father opened it, and there stood a guest.

Now in India a guest is a sacred person; he is as a god for the time being, and must be treated as such. So the poor Brahmin said, 'Come in, sir; you are welcome,' He set before the guest his own portion of the food, which the guest quickly ate and said, 'Oh, sir, you have killed me; I have been starving for ten days, and this little bit has but increased my hunger.' Then the wife said to her husband, 'Give him my share,' but the husband said, 'Not so.' The wife however insisted, saying, 'Here is a poor man, and it is our duty as householders to see that he is fed, and it is my duty as a wife to give him my portion, seeing that you have no more to offer him.' Then she gave her share to the guest, which he ate, and said he was still burning with hunger. So the son said, 'Take my portion also; it is the duty of a son to help his father to fulfil his obligations.' The guest ate that, but remained still unsatisfied; so the son's wife gave him her portion also. That was sufficient, and the guest departed, blessing them. That night those four people died of starvation. A few granules of that flour had fallen on the floor; and when I rolled my body on them, half of it became golden, as you see. Since then I have been travelling all over the world, hoping to find another sacrifice like that, but nowhere have I found one; nowhere else has the other half of my body been turned into gold. That is why I say this is no sacrifice."

This idea of charity is going out of India; great men are becoming fewer and fewer. When I was first learning English, I read an English story book in which there was a story about a dutiful boy who had gone out to work and had given some of his money to his old mother, and this was praised in three or four pages. What was that? No Hindu boy can ever understand the moral of that story. Now I understand it when I hear the Western idea — every man for himself. And some men take everything for themselves, and fathers and mothers and wives and children go to the wall. That should never and nowhere be the ideal of the householder.

Monday, July 6, 2015

Godavari Puskaralu

கோதாவரி புஷ்கரம்
=======

இந்தியாவில்  புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்

பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் (கங்கை), ரிஷபம் (நர்மதை), மிதுனம் (சரஸ்வதி), கடகம் (யமுனை), சிம்மம் (கோதாவரி) கன்னி (கிருஷ்ணா), துலாம் (காவேரி) விருச்சிகம் (தாமிரபரணி), தனுசு (சிந்து), மகரம் (துங்கபத்திரா), கும்பம் (பிரம்ம நதி), மீனம் (பிரணீதா) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகிய தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் ராசி நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் சிம்ம ராசியில் (ஜூலை 14 காலை 6.26)  பிரவேசிப்பதால் கோதாவரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது,  வரும் ஜூலை 14 அன்று தொடங்கி ஜூலை 25 அன்று முடிகிறது. 

கோதாவரி புஷ்கரம்  நடைபெறும் இடங்கள்.
-----------------------------------------------------------------
கோதாவரி புஷ்கரத்தில் கலந்துக்கொள்ள  தெலங்கான மாநிலத்தில் கரீம் நகர் (Karimnagar), காளிஷ்வரம் (Kaleshwaram), பாசர்(basar)  and பத்தராசலம்(Bhadrachalam),  ஆந்திரா மாநிலத்தில்  நரசாபுரம் (Narasapuram), கொவ்வூர் (Kovvur) and ராஜமுந்திரி (Rajahmundry) செல்லலாம்.  

பத்தராசலம் மற்றும் ராஜமுந்திரியில் கோதாவரி நதிக்கரையில் தெலங்கானா, ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.

கோதாவரி புஷ்கரம்  இணையத்தளம்

கோதாவரி புஷ்கரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு http://godavaripushkaralu.co.in என்ற இணையத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

Sunday, June 28, 2015

THE SECRET OF WORK

செயல்புரிவதன் ரகசியம்

அன்பு என்னும் வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். சுதந்திரம் இல்லாதவரையில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, சங்கிலியில் கட்டி, உங்களுக்காக வேலை செய்யச் சொல்லுங்கள்; அவன் மாடுபோல் வேலை செய்வான் . ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. நாமும் உலகப் பொருட்களுக்காக அடிமைபோல் வேலை செய்தோமானால் நம்மிடம் அன்பு இருக்க முடியாது; நாம் செய்யும் வேலையும் உண்மையான வேலையாகாது. உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் செய்யப் படுகின்ற வேலைகளும் சரி, நமக்காகவே செய்யப்படுகின்ற வேலையும் சரி, இது உண்மையே. சுயநலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை. இதோ ஒரு சோதனை: அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும் . அமைதியையும் ஆசிகளையும் விளைவாகக் கொண்டு வராத அன்புச் செயல்கள் எதுவுமே இல்லை. உண்மை இருப்பு, உண்மை அறிவு, உண்மை அன்பு மூன்றும் ஒன்றோடு ஒன்று நிரந்தரமாக இணைந்தவை. இந்த மூன்றும் ஒன்றிலேயே உள்ளன. இதில் எங்கே ஒன்று உள்ளதோ அங்கு மற்றவை இருந்தே தீரும். இவை இரண்டற்ற ஒன்றேயான ஸத்சித் ஆனந்தப் பொருளின் மூன்று நிலைகள். அந்த ஒரு பொருளே நடைமுறை நிலைக்கு வரும்போது, இருப்பு அல்லது ஸத் என்பதை நாம் உலகமாகக் காண்கிறோம். அறிவு அல்லது சித் உலகப் பொருட்களைப் பற்றிய அறிவாக மாறுகிறது; ஆனந்தம் மனித இதயம் அறிந்த உண்மையன்பு அணைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே உண்மையன்பு என்பது காட்டுபவரிடமோ காட்டப்படுபவரிடமே வேதனையை உண்டாக்கும் வண்ணம் ஒரு போதும் செயல்படாது.

ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவள் முழுக்கமுழுக்கத் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டுமென்று அவன் நினைக்கிறான் அவளுடைய நடத்தை ஒவ்வொன்றையும் சந்தேகத்துடன் கண்காணிக்கிறான். அவள் அவனது அருகிலேயே அமர வேண்டும், அவனது அருகிலேயே நிற்க வேண்டும், உண்பதும் போவதும் வருவதும் எல்லாமே அவனுடைய கட்டளைப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவளது அடிமையாகி விட்ட அவன், அவளும் தன் அடிமையாக வேண்டும்.என்ற ஆசைப்படுகிறான் இது அன்பு அல்ல. இது அடிமைகளின் பக்குவப்படாத ஒருவிதப் பற்று; அன்பு போல் தன்னைக் காட்டிக் கொள்கிறது, அவ்வளவுதான். இது அன்பு அல்ல, ஏனெனில் இது துன்பத்தைத் தருகிறது. இவன் விரும்பியதை அந்தப் பெண் செய்யாவிட்டால் அது இவனை வேதனைக்கு உள்ளாக்குகிறது. அன்பிற்கு ஒருபோதும் வேதனை தரும் எதிர்விளைவு இருக்காது. அன்பு ஆனந்தத்தை மட்டுமே எதிர்விளைவாகத் தருகிறது. ஆனந்தத்தைத் தராத அன்பு அன்பல்ல. அது வேறு ஏதோ வொன்றைத் தவறாக அன்பென்று நினைப்பதாகும். வேதனை, பொறாமை சுயநல உணர்ச்சிகள் எவையும் எதிர்விளைவாக உண்டாகாவண்ணம் உங்கள் கணவன், மனைவி, மக்கள், உலகம் பிரபஞ்சம் அனைத்தையும் நேசிப்பதில் நீங்கள் வெற்றி பெற்றீர்களானால் பற்றின்றி இருக்கத் தகுந்த நிலையில் இருக்கிறீர்கள்.

அர்ஜுனா என்னைப் பார் நான் செயல்புரிவதை ஒரு கணம் நிறுத்தினாலும் இந்தப் பிரபஞ்சம் அழிந்து போகும். செயல்புரிந்து நான் அடைவதற்கு எதுவும் இல்லை. நானே இறைவன். பின் நான் ஏன் வேலை செய்யவேண்டும் ? ஏனெனில் நான் உலகை நேசிக்கிறேன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இறைவன் பற்றின்றி இருக்கிறார். ஏனென்றால் அவர் அன்பு செய்கிறார். உண்மையன்பு நம்மைப் பற்றற்றவர்கள் ஆக்குகிறது. எங்கெல்லாம் பற்று இருக்கிறதோ, உலகப் பொருட்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ளும் ஆசை இருக்கிறதோ, அங்கே இருப்பதெல்லாம் வெறும் ஜடப் பொருளணுக்களின் இரண்டு தொகுதிகளுக்கிடையே உள்ள பௌதீகக் கவர்ச்சியே அது; இரண்டு உடம்புகளை நெருக்கமாக, மிக நெருக்கமாக எப்போதும் ஈர்த்துக் கொண்டிருக்கின்ற ஏதோ ஒன்று அது. போதிய அளவு அந்த இரண்டு உடம்புகளும் நெருங்க முடியாவிட்டால் வேதனை விளைகிறது. உண்மையன்பு ஒரு போதும் பௌதீகக் கவர்ச்சியைச் சார்ந்திருப்பதில்லை. அத்தகைய அன்பு கொண்டவர்கள் ஆயிரம் மைல்கள் இடைவெளியில் இருக்கலாம். ஆனால் அவர்களது அன்பு ஒருபோலவே இருக்கும் அது அழிவதில்லை, எந்த வேதனையான எதிர்விளைவையும் உண்டாக்குவதில்லை.

இத்தகைய பற்றின்மை ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு அடையக்கூடிய ஒன்று இந்த நிலையை அடையும் போது அன்பின் லட்சியத்தை அடைந்து விடுகிறோம்;சுதந்திரர்களாகி விடுகிறோம்; இயற்கையின் கட்டுக்கள் நம்மிடமிருந்து விலகிவிடுகின்றன. உலகம் உண்மையாக எப்படி இருக்கிறதோ அப்படியே நாம் காண்போம். அதன் பின் இயற்கை நம்மை எந்தச் சங்கிலியாலும் கட்டுவதில்லை. நாம் முழுக்க முழுக்கச் சுதந்திரர்களாகி விடுவோம்; செயல்களின் பலன்களைப் பொருட்படுத்த மாட்டோம். அந்தப் பலன்கள் என்ன என்பதைப்பற்றி யாருக்குக் கவலை!

நீ உன் குழந்தைகளுக்குத் தருபவற்றிற்கு எதையாவது திருப்பிக் கேட்பாயா? உன் குழந்தைகளுக்காக உழைப்பது உனது கடமை, அதோடு விஷயம் முடிந்து விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, நகருக்கோ, நாட்டிற்கோ நீங்கள் எதையாவது செய்யும்போதும் இதே மனநிலையைக் கைக்கொள்ளுங்கள்; அதாவது எதையும் பிரதியாக எதிர்பார்க்காமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்வதுபோலவே செய்யுங்கள். பிரதி பலனைப்பற்றி எந்த எண்ணமும் இல்லாமல், செய்கின்ற அனைத்தையும் உலக வேள்வியில் ஓர் ஆஹுதியாகச் சமர்ப்பிக்கின்ற நிலையில் உங்களால் எப்போதும் இருக்க முடியுமானால், நீங்கள் செய்கின்ற வேலை உங்களைப் பற்றுக்கொள்ளச் செய்யாது. பிரதியாக எதையாவது எதர்பார்க்கும்போதுதான் பற்றுவருகிறது. அடிமைகளைப்போல் வேலை செய்தால் சுயநலமும் பற்றுமே உண்டாகிறது. மனத்தின் எஜமானர்களாகச் செயல்புரிந்தாலோ பற்றின்மையால் வரும் ஆனந்தம் விளைகிறது.

-------------------------------------------***************------------------------------
 
The word "love" is very difficult to understand; love never comes until there is freedom. There is no true love possible in the slave. If you buy a slave and tie him down in chains and make him work for you, he will work like a drudge, but there will be no love in him. So when we ourselves work for the things of the world as slaves, there can be no love in us, and our work is not true work. This is true of work done for relatives and friends, and is true of work done for our own selves. Selfish work is slave's work; and here is a test. Every act of love brings happiness; there is no act of love which does not bring peace and blessedness as its reaction. Real existence, real knowledge, and real love are eternally connected with one another, the three in one: where one of them is, the others also must be; they are the three aspects of the One without a second — the Existence - Knowledge - Bliss. When that existence becomes relative, we see it as the world; that knowledge becomes in its turn modified into the knowledge of the things of the world; and that bliss forms the foundation of all true love known to the heart of man. Therefore true love can never react so as to cause pain either to the lover or to the beloved.

 Suppose a man loves a woman; he wishes to have her all to himself and feels extremely jealous about her every movement; he wants her to sit near him, to stand near him, and to eat and move at his bidding. He is a slave to her and wishes to have her as his slave. That is not love; it is a kind of morbid affection of the slave, insinuating itself as love. It cannot be love, because it is painful; if she does not do what he wants, it brings him pain. With love there is no painful reaction; love only brings a reaction of bliss; if it does not, it is not love; it is mistaking something else for love. When you have succeeded in loving your husband, your wife, your children, the whole world, the universe, in such a manner that there is no reaction of pain or jealousy, no selfish feeling, then you are in a fit state to be unattached. 

Krishna says, "Look at Me, Arjuna! If I stop from work for one moment, the whole universe will die. I have nothing to gain from work; I am the one Lord, but why do I work? Because I love the world." God is unattached because He loves; that real love makes us unattached. Wherever there is attachment, the clinging to the things of the world, you must know that it is all physical attraction between sets of particles of matter — something that attracts two bodies nearer and nearer all the time and, if they cannot get near enough, produces pain; but where there is real love, it does not rest on physical attachment at all. Such lovers may be a thousand miles away from one another, but their love will be all the same; it does not die, and will never produce any painful reaction.

To attain this unattachment is almost a life-work, but as soon as we have reached this point, we have attained the goal of love and become free; the bondage of nature falls from us, and we see nature as she is; she forges no more chains for us; we stand entirely free and take not the results of work into consideration; who then cares for what the results may be?

Do you ask anything from your children in return for what you have given them? It is your duty to work for them, and there the matter ends. In whatever you do for a particular person, a city, or a state, assume the same attitude towards it as you have towards your children — expect nothing in return. If you can invariably take the position of a giver, in which everything given by you is a free offering to the world, without any thought of return, then will your work bring you no attachment. Attachment comes only where we expect a return.

God is one

ஒரு குட்டி கதை..



ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழயில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள் இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின, சில மாதங்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன. வழயில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில மாதங்கள் கழித்து ரமலான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்து ஊரின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில் கூடுகட்டி தங்கின.

அப்போது கீழே அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை புறாக்கள் கண்டன. வேறு வேறு மதத்தைச் சேர்ந்த சிலர் சண்டை போட்டுக் கொண்டு, ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு குஞ்சி புறா தாய் புறாவிடம் கேட்டது ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் என்று.

அதற்கு அந்த தாய் புறா சொன்னது நாம் இங்கு இருந்தபோதும் புறா தான், சர்ச் போன போதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறாதான் , ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் "இந்து". சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்துவன்", மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது.

குழம்பிய குட்டி புறா அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும் என்றது. அதற்க்கு தாய் புறா இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கிழே இருக்கிறார்கள் என்றது.

Monday, June 1, 2015

EACH IS GREAT IN HIS OWN PLACE



கர்மயோகம் - அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே!



இறைவனை வழிபடுவதற்காக உலகத்தைத் துறந்து செல்கின்ற ஒருவன் உலகத்தில் வாழ்ந்து உலகின் நன்மைக்காகச் செயல் புரிந்துகொண்டிருப்போர் எல்லாம் இறைவனை வழிபடாதவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதுபோலவே குடும்பத்தில் மனைவி மக்களோடு வாழும் இல்லறத்தான் உலகைத் துறந்து வாழும் துறவியரைப் பயனற்ற நாடோடிகள் என்று கருதக்கூடாது. அவரவர் இடத்தில் ஒவ்வொருவரும் பெரியவரே இந்தக் கருத்தை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.

ஓர் அரசன் தன் நாட்டிற்கு வரும் துறவிகளை எல்லாம் உயர்ந்தவன் யார்? உலகைத் துறந்து துறவியானவனா? உலகில் வாழ்ந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானா? என்று கேட்பது வழக்கம் அறிவாளிகள் பலர் அந்தச் பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வந்தார்கள் சிலர் துறவிகளே சிறந்தவர்கள் என்றனர். அரசன் அவர்களின் கூற்றை நிரூபிக்கச் சொன்னான் அவர்களால் முடியாமல் போகவே அவர்களைத் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபடுமாறு கட்டளையிட்டான் வேறு சிலர் வந்து தன் கடமைகளைச் செய்து வாழும் இல்லறத்தானே சிறந்தவன் என்று கூறினர். அதையும் அரசன் நிரூபிக்கச்சொன்னான் அவர்கள் நிரூபிக்காதபோது அவர்களையும் இல்லறத்தார்களாக வாழும்படிக் கட்டளையிட்டான்.

கடைசியாக ஒரு நாள் இளம்துறவி ஒருவர் அரசனிடம் வந்தார். அவரிடமும் அரசன் தன் கேள்வியைக் கேட்டான் அதற்கு அந்தத் துறவி மன்னா அவரவர் நிலையில் இருக்கும்போது இருசாராரும் சம அளவில் உயர்ந்தவர்களே என்றார் அரசன் அதை நிரூபியுங்கள் என்றான் அதற்கு அந்த இளம் துறவி நான் அதை நிரூபிக்கிறேன் ஆனால் நீங்கள் என்னுடன் வந்து நான் வாழ்வதுபோல் சில நாட்கள் வாழ வேண்டும் அப்போது நான் கூறியதை நிரூபிக்க வசதியாக இருக்கும் என்றார் அரசன் அதனை ஏற்றுக்கொண்டு துறவியுடன் புறப்பட்டான் இருவரும் அந்த நாட்டைக் கடந்து மேலும் பல நாடுகளைக் கடந்து ஒரு பெரிய நாட்டை அடைந்தார்கள் அப்போது அந்த நாட்டின் தலைநகரில் ஒரு பெரிய விழா நடந்து கொண்டிருந்தது எங்கு பார்த்தாலும் வாத்திய இசையும் பாட்டும் ஆரவாரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. தண்டோரா போடுபவனின் குரலும் இடையில் கேட்டது மக்கள் கண்ணைப் பறிக்கும் ஆடைகளோடு கூடியிருந்தனர். அவர்கள் முன்னால் அவன் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான் அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மன்னனும் துறவியும் அங்கே சென்றனர் அந்த நாட்டு மன்னனின் மகளுடைய சுயம்வரம் நடைபெறப் போகிறது என்பதையே அவன் அங்கே அறிவித்துக் கொண்டிருந்தான்.

சுயம்வரத்தில் அரசகுமாரிகள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பது இந்தியாவில் பண்டைய வழக்கமாக இருந்தது. தனக்குக் கணவனாக வரப்போகின்றவன் இப்படியிருக்க வேண்டும் என்று ஒவ்வோர் அரச குமாரியும் சில எண்ணங்களைக் கொண்டிருந்தாள் சிலருக்கு ஈடற்ற அழகன் வேண்டும், சிலருக்கு அறிவில் சிறந்தவன் வேண்டும், சிலருக்குப் பெரிய செல்வந்தன் வேண்டும். அண்டை அயல்நாடுகளின் ராஜகுமாரர்கள் எல்லாம் நன்றாக அலங்கரித்துக் கொண்டு சுயம்வரத்திற்கு வருவார்கள் சிலவேளைகளில் அவர்கள் தங்களுடன் ஓர் அறிவிப்பாளனையும் அழைத்து வருவார்கள் அவன் அந்த ராஜகுமாரனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அந்த இளவரசி அவனை மணந்து கொண்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதை அறிவிப்பான் ராஜகுமாரி அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் அமர்ந்தபடி ஒவ்வொரு ராஜகுமாரனிடமும் வந்து அவனைப் பற்றி விவரங்களை எல்லாம் கேட்பாள் திருப்தி அடையாவிட்டால் முன்னே செல்லுங்கள் என்று பல்லக்கு சுமப்பவர்களிடம் கூறுவாள் நிராகரிக்கப்பட்ட ராஜகுமாரர்களைப் பின்னர் பார்ப்பதே இல்லை தனக்குப் பிடித்தவனைக் கண்டுகொண்டால் உடனே அவன் கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவிப்பாள் அவன் அவளை மணப்பான்.

நமது துறவியும் மன்னனும் சென்ற அந்த நாட்டின் இளவரசிக்கும் இந்தச் சுயம்வர விழா தான் நடந்து கொண்டிருந்தது. அவள் உலகிலேயே பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள் அவளை மணந்து கொள்பவன் அவளுடைய தந்தைக்குப் பிறகு அந்த நாட்டின் அரசன் ஆவான் அவள் பேரழகன் ஒருவனை மணக்க விரும்பினாள் இதற்கு முன்பும் எத்தனையோ சுயம்வரங்கள் நடந்தன அவளுக்கு யாரையும் பிடிக்க வில்லை அவளால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை இந்தச் சுயம்வரம் முன் நடந்த எல்லாவற்றையும் விட மிகச் சிறந்ததாக இருந்தது. முன்பை விட அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர் ராஜகுமாரி பல்லக்கில் அமர்ந்து ஒவ்வொருவராகப் பார்த்தாள் ஆனால் எல்லோரையுமே ஒதுக்கிவிட்டாள் இந்த முறையும் சுயம்வரம் தோல்வி தானோ என்று எல்லோரும் கவலைப்பட்டனர்.

அப்போது அந்த மண்டபத்திற்குள் இளம்துறவி ஒருவர் நுழைந்தார். கம்பீரமும் அழகும் நிறைந்த அவர் அங்கே வந்தது சூரியனே வானத்தை விட்டுப் பூமியில் வந்ததுபோல் இருந்தது. அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டு அங்கே என்ன நடக்கிறது என்று அவர் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கே வந்த இளவரசி அவரது அழகில் தன்னைப் பறிகொடுத்து கையிலிருந்த மாலையை அவர் கழுத்தில் சூட்டினாள் இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்தத் துளவி அதிர்ச்சியுற்றவராக என்ன முட்டாள்தனம் இது ? நான் ஒரு துறவி எனக்னென்ன திருமணம் என்று கூறிமாலையைக் கழற்றிக் கீழே எறிந்தார். இதைக் கண்ட அந்த நாட்டு அரசர் இந்தத் துறவி ஏழையாக இருப்பதால் இளவரசியை மணந்துகொள்ள பயப்படுகிறான் என்று நினைத்து என் மகளை மணந்து கொண்டதும் இந்த நாட்டில் பாதி உனக்குச் சொந்தமாகும் நான் இறந்த பிறகு முழு நாடும் உனக்கே என்று கூறி அந்த மாலையை எடுத்து மறுபடியும் அந்தத் துறவியின் கழுத்தில் போட்டான் துறவியோ மீண்டும் மாலையைக் கழற்றிக் கீழே வீசியெறிந்து மடத்தனம் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சட்டென்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் இதற்குள் இளவரசி அந்தத் துறவியிடம் அளவற்ற காதல் கொண்டுவிட்டாள் ஒன்று நான் அவரை மணந்து கொள்ள வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்று கூறியபடியே அவரைத் திரும்ப அழைத்து வருவதற்காக அவர் பின்னாலேயே சென்றாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் துறவி தான் அழைத்து வந்த அரசனைப் பார்த்து மன்னா! நாம் அந்த இருவரையும் தொடர்ந்து செல்வோம் என்று கூறினார். பின்னர் இருவரும் இளவரசி தங்களைப் பார்த்து விடாதபடி அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.

இளவரசியை மணக்க மறுத்த இளந்துறவி நகரத்தை விட்டுப் பல மைல் தொலைவு நடந்துபோய் விட்டார். ஒரு காட்டின் அருகே வந்ததும் அதற்குள் நுழைந்தார் தொடர்ந்து வந்த இளவரசியும் காட்டிற்குள் நுழைந்தாள். நமது துறவியும் அரசனும் பின்தொடர்ந்தனர். அந்த இளந்துறவிக்குக் காடும் குறுகிய பாதைகளும் அத்துபடியாக இருந்தது சட்டென்று அவற்றுள் ஏதோ ஒருவழியில் நுழைந்து மறைந்துவிட்டார் இளவரசியால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை காடு முழுவதும் அலைந்து திரிந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் வெளியேறவும் வழியறியாமல் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள் அப்போது நமது துறவியும் அரசனும் அவளிடம் சென்று அழாதே நீ வெளியே செல்ல நாங்கள் வழி காட்டுகிறோம் இப்போது மிகவும் இருட்டிவிட்டதால் வழி காண்பது சிரமம் இதோ பெரிய மரம் ஒன்று உள்ளது இதனடியில் இன்றிரவு தங்கலாம் காலையில் உனக்கு வழி காட்டுகிறோம் என்றனர்.

அந்த மரத்தில் ஒரு குருவியும் அதன் மனைவியும் மூன்று குஞ்சுகளும் ஒரு கூட்டில் வாழ்ந்து வந்தன அந்தச் சின்னஞ்சிறு குருவி மரத்திற்குக் கீழே வந்து தங்கியுள்ள மூவரையும் பார்த்துத் தன் மனைவியிடம் என் அன்பே இப்போது என்ன செய்வது நம்வீட்டில் சில விருந்தினர் வந்துள்ளனர் இது குளிர்காலம் வேறு நெருப்புக்கூட இல்லையே என்று கவலையுடன் கூறியது பின்னர் எங்கோ பறந்து சென்று எரிந்து கொண்டிருக்கும் ஒரு சுள்ளியைக் கொண்டுவந்து அந்த மூன்று பேருக்கும் முன்னால் போட்டது அவர்கள் மேலும் சில சுள்ளிகளைச் சேர்த்துத் தீயை வளர்த்துக் குளிர்காய்ந்தார்கள்.

அப்போது குருவிக்கு மனநிறைவு ஏற்பட வில்லை மீண்டும் அது தன் மனைவியைப் பார்த்து அன்பே இப்போது என்ன செய்வது? அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மால் எதுவும் கொடுக்க முடியவில்லையே நாமோ இல்லறத்தினர் வீடு தேடி வருபவர்களின் பசியைத் தீர்ப்பது நமது கடமை அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்தாக வேண்டும் என் உடம்பை அவர்களுக்கு உணவாகத் தருகிறேன் என்று கூறியபடி அவர்கள் வளர்த்திருந்த நெருப்பில் பாய்ந்து மாண்டது மரத்தடியிலிருந்த மூவரும் அந்த குருவி நெருப்பில் வீழ்வதைப் பார்ததார்கள் தடுக்கவும் முயன்றார்கள் ஆனால் குருவி மிக வேகமாக நெருப்பில் வீழந்துவிட்டது.

அந்தக் குருவியின் மனைவி தன் கணவனின் செயலைப் பார்த்தது. பின்னர் இங்கோ மூன்று பேர் இருக்கிறார்கள் ஒரு சிறிய பறவையின் உடல் எப்படி அவர்களது பசியைத் தீர்க்கும் அது போதாது என் கணவரின் முயற்சி வீணாகாமல் காப்பது மனைவியான என் கடமை அவர்களுக்கு என் உடலும் கிடைக்கட்டும் என்று கூறித் தானும் தீயில் வீழ்ந்தது.

நடந்தவை அனைத்தையும் மூன்று குஞ்சுகளும் கண்டன . தங்கள் விருந்தினர்களுக்குப் போதுமான உணவு இல்லாததைக் கண்ட அவை நம் பெற்றோர் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் அப்படியும் உணவு போதவில்லை பெற்றோரின் பணியைத் தொடர்வது நம் கடமை நமது உடலும் போகட்டும் என்று பேசிபடியே மூன்றும் அந்த நெருப்பிற்குள் வேகமாக வீழந்து இறந்தன.

நடந்ததைக் கண்டு திகைத்த அந்த மூவருக்கும் அந்தக் குருவிகளின் உடலைத் தீண்டவும் மனம் வரவில்லை உணவு எதுவும் இன்றியே அவர்கள் இரவைக் கழித்தனர். பொழுது விடிந்ததும் துறவியும் அரசனும் இளவரசி வெளியேற வழிகாட்டினர் அவள் தன் தந்தையிடம் திரும்பினாள்.

பின்னர் நமது துறவி அரசனிடம் மன்னா தான் இருக்கும் இடத்தில் ஒவ்வொருவரும் உயர்ந்தவர்கள் என்பதைக் கண்டு கொண்டாய் அல்லவா? நீ இல்லறத் தானாக வாழ விரும்பினால் இந்தப் பறவைகளைப் போல் எந்த வினாடியும் பிறருக்காக உன்னைத் தியாகம் செய்வதற்குத் தயாராக வாழ வேண்டும் உலகைத் துறந்து வாழ விரும்பினால் மிக அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறிச் சென்ற அந்த இளந்துறவியைப்போல் இரு இல்லறத்தானாக விரும்பினால் உன் வாழ்வை மற்றவர்களின் நன்மைக்காக ஒரு பலியாக அர்ப்பித்து விடு துறவு வாழ்வைத் தேர்ந்தெடுத்தால் அழகையோ பணத்தையோ பதவியையோ ஏறெடுத்தும் பார்க்காதே அவரவர் நிலையில்அவரவர் பெரியவரே ஆனால் ஒருவரின் கடமை மற்றவரின் கடமை ஆகாது என்றார்.