Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு - மத்திய அரசு உண்மை நிலவரம்

ஓ.பன்னீர் செல்வம் mixture சாப்பிடுகிறாரா....?


நமது முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் Mixture சாப்பிடுகிறாரா, அல்லது வாயில் கொழுக்கட்டை வைத்து உள்ளாரா என்பது தேவையில்லாத விமர்ச்சனம்...... நமது போராட்டதிற்கு சிறிதுமளவும் பயன்படாத ஒன்று.....
நமது போராட்டத்தின் குறிக்கோள் எவ்வகையிலும் தடம்மாற கூடாது..... நமக்கு சல்லிக்கட்டு வேண்டும், நாட்டு பசுக்கள் பாதுக்காக்க பட வேண்டும், PETA என்ற தீய சக்தி இந்திய நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்....... இந்திய பாரம்பரியம் மற்றும் பண்பாடு அழிக்க நினைக்கும் எந்த தீய சக்தியும் இனி வரும் காலங்களிலும் அனுமதி தர கூடாது..... மேலும் Animal Welfare Board of India (AWBI) என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்திலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளான பூர்வா ஜோஷிபுரா (Poorva Joshipura) கண்டிப்பாக நிக்க வேண்டும்..... மேலும் இந்த வாரியத்திலுள்ள PETA உறுப்பினர்கள் அத்தனை பேரையும் உடனடியாக நிக்க வேண்டும்....

எனது அருமை சகோதர சகோதிரிகளே, நமது போராட்டம் மாநில அரசுக்கு எதிராதனாக மாற்றுவதில் எந்த பயனுமில்லை........... ஒரு சில விஷமிகள் இதில் அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்கிறார்கள்.....

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இருந்த வரை, சல்லிக்கட்டு விசயத்தில் கடுமையாக போராடினார் என்பதில் யாருக்கும் இங்கு மாற்று கருத்து இருக்க முடியாது.....

புதிதாக பொறுப்பேற்று உள்ள ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், கடந்த முறை பிரதமரை சந்திக்கும் போது எடுத்துரைத்தார் என்பது மறுப்பதற்கில்லை....... இன்றும் பிரதமரை சந்தித்து சல்லிக்கட்டிற்கு அவரசம் சட்டம் பிறப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.......

உச்ச நீதிமன்றத்தில் மறைந்த முதல்வர் செல்வி செ. செயலலிதா அவர்கள் தலைமையில் இருந்த அதிமுக அரசு கடுமையான வாதத்தை முன்னிறுத்தியது, அதில் காளையை காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது தவறு....எங்கள் செல்ல பிராணியை கொடுமைப்படுத்துகிறோம் என்பது ஏற்க முடியாத குற்றசாட்டு என்றும் வலியுறுத்தினார்கள்....

மத்திய அரசும் தன் வாதத்தை கடுமையாக தெரிவித்தது, இருந்தும் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை.... ஏன்..?

உன்மையில் சல்லிக்கட்டிற்கு தீர்வு எங்குள்ளது , எப்படி கிடைக்கும்......

சல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு தரும் அதிகாரம் மாநில அரசு கையில் இல்லை, தற்காலிகமான தடை விதிக்கும் அதிகாரமும் மாநில அரசு கையில் இல்லை.....

மத்திய அரசு, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக வாதிட்டாலும், அது செய்த மிக பெரிய தவறு, காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிருந்து காளையை இன்னும் நீக்காமல் இருப்பது தான்... காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிருந்து காளையை எடுத்தாலே போதும்...... உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும்.....

இதற்கு ஏன் தயங்கிறது மத்திய அரசு.....?

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை உடைக்கும் வகையில் ஒரு சட்டம் பிறப்பிக்க முடியுமா என்பது சட்ட வல்லுநர்கள் தெளிவு படுத்த வேண்டும்

சல்லிக்கட்டு வழக்கு முழு வாதங்களும் டிசம்பர் 6ஆம் தேதியே முடிந்த நிலையில் இன்னும் தீர்ப்பு வழங்காமல், தமிழ் நாட்டில் இவ்வளவு போராட்டம் நடக்கும் போதும் தீர்ப்பு பற்றி கவலைப்படாமல் ஏன் உச்ச நீதிமன்றம் பொறுமை காக்கிறது என்று புரியவில்லை......

மறைந்த முதல்வர் செல்வி சையலலிதா அவர்களின் சொத்து குவிப்பு வழக்கும் முழு வாதங்களும் முடிந்த ஆறு மாதங்கள் ஆன நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம், மேலும் பல ஆண்டுகளாக ராசீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டபட்ட முருகன், பேறிவாளன் போன்றோர் விடுதலை செய்ய தொடரப்பட்ட வழக்கும் தேதி குறிப்படாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம், இதில் தான் புதிதாக இணைந்துள்ளது நமது சல்லிக்கட்டு வழக்கும்......

இந்த வழக்கிற்கெல்லாம் எப்பொழுது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து முடித்து வைக்கும்...... ?

இப்பொழுது சொல்லுங்கள் Mixture சாப்பிட்டு கொண்டு இருப்பது யார்.....? நமது முதல்வர் பன்னீர் செல்வமா அல்லது உச்ச நிதிமன்றமா......? சிந்திப்பீர்........!

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு அளிக்காமல் மத்திய அரசோ, மாநில அரசோ எந்த நடவடிக்கை எடுத்தாலும் எல்லாம் தற்காலிகமாக தான் இருக்கும்..... அதை உடனடியாக தவிடு பொடியாக்கி விடுவார்கள்..... People for the Ethical Treatment of Animals (PETA),People for Animals (PFA), Human Society Internationals (HSI), போன்ற அந்நிய தீய சக்திகள்.....

ஒருவேளை ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகளாக மத்திய அரசு செய்ய வேண்டியவை.......

விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு 11(1)(n) யில் Animal Fighting என்பது குற்ற நடவடிக்கையாகும்.... இந்த சட்டத்திலிருந்து திருத்தும் கொண்டு வர வேண்டும், அதாவது சல்லிக்கட்டு அல்லது ரேக்ளா பந்தயம் அல்லது பாரம்பரியாக நடக்கும் போட்டிகளை Animal Fighting'a கருத கூடாது....
விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு 22'ல் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து, காளையை நீக்கும் வகையில், உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்,.

போலீஸ், ராணுவம் பயன்படுத்தும் எந்த விலங்கும், அதேப்போல் அறிவியல் கண்காட்சிக்கு பயன்படுத்தப்படும் எந்த விலங்கும், காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகளாக கருதப்படமாட்டாது என்று விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960இன் பிரிவு 27'ல் சொல்கிறது.... இந்த பிரிவில் சல்லிக்கட்டு காளைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.....

மேலும் பாரம்பரிய, கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவற்றை பாதுகாக்கும் வகையில், தனியாகவும் சட்டம் கொண்டு வரலாம். இது தான் மத்திய அரசு இந்த விசயத்தில் தன்னால் செய்ய முடிந்தது....

எப்பொழுது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வருகிறதோ அன்று வரை இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுயில்லை....... அதுவரை அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரும் வாய்ப்புமில்லை...... ஒரு வேலை மத்திய அரசு கொண்டு வந்தாலும் PETA போன்ற அந்நிய பண முதலைகள் அதற்கு தடை வாங்கி விடுவார்கள்....

காத்திருப்போம் உச்ச நீதிமன்றத்தில் நமக்கான தீர்ப்பு விரைவில் வர வேண்டுமென்று......

-பிரவின் சுந்தர் பூ.வெ.

#NeedJusticesoonforJallikattu
#BanPETA
#WeNeedJalikattuPermanently
#SaveourCountryBreeds

No comments:

Post a Comment