Sunday, January 1, 2017

Cashless Economy vs Cashless People

மோடியின் திட்டத்தால் கருப்பு பணம் ஒழிந்து விட்டது என்று நேற்று வரை கொக்கரித்தவர்களுக்கு.....

திட்டம் செயல்படுத்திய விதத்தால் தான் இன்று தோல்வி அடைந்தது.... கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தூக்கம் இல்லாமல் சுற்றுகிறார்கள், என்றெல்லாம் பேசினார்கள்.

நாடெங்கிலும் பல இடங்களில் கோடி கணக்கில் புதிய 2000 நோட்டு வருமான வரி சோதனையில் சிக்கி வருகிறது.... இவையெல்லாம் கருப்பு பணம் என்பது நாடு அறிந்ததே. இவர்கள் எப்படி இவ்வளவு பணம் மாற்றினார்கள்..? இது நிர்வாகத்தின் திறமையின்மை உணர்த்தவில்லையா.....? கருப்பு பணம் மாற்றவே முடியாது என்று கொக்கரித்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.....

சாமான்யன் வங்கிகளோ அல்லது ஏ.டி.எம்'ல் 10,000 ரூபாய் பணம் எடுக்க முடியாமல் கஷ்ட படும் நிலையில் இவர்களிடம் மட்டும் எப்படி எவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறது..... இது நிர்வாகத்தின் திறமையின்மை உணர்த்தவில்லையா.....?

ஒரு புறம் வங்கிகளில் பணமில்லை,ஏ.டி.எம்' லும் பணமில்லை , மறுபுறம் கோடி கணக்கில் ஒரு சிலர் வீட்டில் புதிய நோட்டுகள் கட்டு காட்டாக சிக்குகிறது.....

கருப்பு பணம் உருவாகும் இடத்தை சுத்தம் செய்யாமல், எங்கோ பயனற்ற இடத்தில் செய்வதால் என்ன பயன்.... அது மீண்டும் மீண்டும் உருவாக தான் செய்யும்.

மோடியின் நிர்வாக திறமையில்லாமையால் ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்படுத்தியது தான் மிச்சம்.....

மொத்தத்தில் Cash Less Economy நோக்கி இந்தியா செல்கிறதோ இல்லையோ, ஆனால் Cashless People (at any Form) ஆக மாற்றி விட்டார்கள்.....

No comments:

Post a Comment