Sunday, January 1, 2017

மின்னணு பரிமாற்றமே அரசின் லட்சியம்....- மோடி...

மின்னணு பரிமாற்றமே அரசின் லட்சியம்....- மோடி...

மின்னணு பரிமாற்றமே, அல்லது ரொக்கமில்லா பண பரிவர்த்தனை (Cash Less Economy) என்பது எவ்வளவு சாத்தியம் இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்....

பற்று அட்டைகள் தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருப்பது நான்கு, (Master Card,Maestro Card,Visa Card, Rupay Card).

Rupay Card தவிர மற்ற எல்லா அட்டைகளும் வெளிநாட்டு நிறுவனங்களுடையது, இதன் மூலம் நாம் செய்யும் ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கும் நமது வங்கி இவர்களுக்கு கட்டணம் செலுத்தும்..... இது பாதுகாப்புடையது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை, இருந்தாலும் நாம் செய்யும் உள்ளூர் வர்த்தகத்திற்கும் நாம் தேவையில்லாமல் இவர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதை தடுக்கவே Rupay Card அறிமுகப்படுத்தபட்டது.

கடந்த ஜனவரி மாதம் என்னுடைய பற்று அட்டை(Visa Card) பழுதுடைந்ததினால் புதியதாக விண்ணப்பித்த போது, என் தலையில் வலுக்கட்டாயமாக இந்த Rupay Card கட்டிவிட்டார்கள். வாங்கியது முதல் நான் பட்ட சிரமங்களுக்கு அளவேயில்லை..... என்னுடைய வங்கியில் உள்ள A.T.M ல் இந்த புதிய Rupay Card Detect ஆகவில்லை... பெரும்பாலும் A.T.M இது Detect ஆக வில்லை, சரி போன போகுது, நாம் மின்னணு பரிவத்தனைகள் செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மின்னணு பரிவத்தனைகளில் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான இணையதளங்கள் தவிர, ஒரு சில தனியார் நிறுவன இணையதளங்கள் தவிர, பெரும்பாலும் Rupay Card அங்கீகரிக்க படுவதில்லை, (Most of the Websites Accept Master Card, Maestro Card, Visa Card, Only Few websites Accept Rupay card for E-transactions).

ஆக மின்னணு பரிவத்தனை மூலமும் பண செலவு செய்ய முடியவில்லை, A.T.M லும் பணம் எடுக்க முடியாமால், நான் பட்ட வேதனைகள் என்னனென்று சொல்ல.... பிறகு போய் வங்கி மேலாளரிடம் சண்டைப்போட்டு மீண்டும் Visa Card வாங்குவதற்குள் ஒரு முழு மாசம் முடிந்தது.....

இதில் இருந்து சொல்லுவது என்னவென்றால், வெளிநாட்டு பற்று அட்டைகள்(Master Card, Maestro Card, Visa Card,) தரும் சேவை நம் Rupay Card தருவதில்லை. மேலும் உள்நாட்டு அரசு சார்ந்த பண பரிவத்தனைகளுக்கு நாம் இந்த Rupay Card பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லா பரிவத்தனைகளுக்கும் இந்த Rupay Card உபயோகப்படுத்த வேண்டுமென்றால் இதுவும் மற்ற வெளிநாட்டு அட்டைகள் போல் உலகளவில் அங்கீரிக்க பட வேண்டும், அப்பொழுது தான் நமக்கு உண்மையில் பயன் அளிக்கும்... அதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாம் தண்ட செலவு கொடுத்து தான் ஆக வேண்டியுள்ளது....

மோடி அவர்கள் சொன்னது போல் எல்லா பரிவத்தனைகளும் இந்த பற்று அட்டைகள் பயன்படுத்துவதால் யாருக்கு லாபம்..... நம் நாட்டிற்க்கா, அல்லது வெளிநாட்டிற்க்கா..... சிந்திப்பீர்.....? இப்பொழுது புரிந்திருக்கும் ஏன் மோடியின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது என்று....!

சரி அடுத்து பற்று அட்டை பயன்படுத்தாமல் மின்னணு பரிமாற்ற (Internet Banking) பயன்படுத்தலாம் என்று கேட்பவர்களுக்கு......

தாராளமாக பயன்படுத்தலாம்..... நமது நிதியமைச்சர் கூற்றுப்படி நமது மொத்த பரிவர்த்தனைகளில் வெறும் 10% மட்டும் தான் இந்த மின்னணு பரிமாற்றம். இந்த 10% சதவிகித்தில் உள்ள ஒரு சிலர் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளுக்கு இரயில் முன்பதிவு செய்ய ஒரே நேரத்தில் முயற்சி செய்தால் Server down ஆகிறது..... இப்படி இருக்கும் போது நாட்டில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளும் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நடைப்பெற்றால் என்ன நடக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.....

தற்போது 10% பேர் பயன்படுத்தும் இந்த மின்னணு பரிமாற்றத்தில் பெரும்பாலும் பரிவர்த்தனைகள் தோல்வி அடைவத்தில்லை ஒரு வேளை தோல்வி அடைந்து (பணம் தவறாக கழித்து கொள்ள பட்டால்), நம் பணம் நம் கணக்கிற்கு மீண்டும் வர 3 முதல் 10 வேலை நாட்களாகும்.

மோடியின் இந்த நடவடிக்கையின் (500 மற்றும் 1000 செல்லாது என்பதன்)மூலம் நாம் கண்டிப்பாக மின்னணு பரிமாற்றத்திற்கு மாற வேண்டிய நிர்பந்தம். இதனால் இந்த 10% பேர் உயர தான் போகிறது.... அதிகப்படியான பயனாளர்களை சமாளிக்கும் அளவு நம்மிடம் தொழில்நுட்பம் உள்ளதா....? தோல்வி அடையும் பரிவர்த்தனைகள் பணம் திருப்பி வர நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்தால் அதுவரை அந்த பரிவர்த்தனை தடைப்படுகிறது அல்லவா..... எடுத்துக்காட்டிற்கு மின் கட்டணம் கடைசி நாளில் செலுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நாள் என்பதால் அதிகப்படியான பயனாளர்கள் பயன்பாட்டால் ஒரு வேலை என்னுடைய பரிவர்த்தனை தோல்வி அடைந்து என் பணம் கழித்துக்கொள்ளப்பட்டால், எனக்கு தெரியும் என் பணம் எனக்கு 3 முதல் 10 நாட்களுக்குள் வந்துவிடும் என்று......அதே நேரம் அன்று கட்டணம் செலுத்த வில்லை என்றால் என்னுடைய இணைப்பை துண்டித்து போய் விடுவார்கள், நான் கட்டினேன், பணம் பிடித்தம் செய்ய பட்டுள்ளது, வரும் வரை பொறுத்து கொள்ளுங்கள் என்றால் ஏற்ப்பார்களா..... சொல்லுங்கள் பார்போம்.... (Due to heavy Load on Server, if my Transactions fails and my Money is deducted from my account. I Know my Money will back by another 3 to 10 working days. But EB Staff does not bother about those things, they will disconnect my connection,). பணம் திரும்ப என் கணக்கிற்கு வரும் வரை மின் கட்டணம் செலுத்த முடியாது..... அல்லது வேறு ஒரு பணத்தை கொண்டு தான் பரிவர்த்தனை செய்ய முடியும்..... வேறு பணமில்லாத பட்சத்தில் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியது தான்.....

இப்படி நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு..... இதை எல்லாம் சரிப்படுத்தாமல், அவரச கதியில் இப்படி நம்மை மின்னணு பரிமாற்றத்திற்கு நம்மை நிர்ப்பந்திப்பது ஏன் என்று தான் புரியவில்லை.....

எல்லா பரிவர்த்தனைகளும் ரொக்கமில்லாமல் மின்னணு பரிவர்த்தனை என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்று....... இதற்கு நம் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் முன்னேற வேண்டியுள்ளது

பின்குறிப்பு: நான் கூறியவை எல்லாம் படித்த மக்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் நிலைமை அய்யோப்பாவம்.....

-பிரவின் சுந்தர் பு .வெ

No comments:

Post a Comment