Friday, January 20, 2017

Why I Support O.Panneer Selvam


எனக்கு தமிழக  M.L.A மற்றும் M.P கள் மேல் சிறிதளவும் நம்பிக்கையில்லை......   பணத்திற்க்காகவும், பதவிக்காக இவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்..........

இவர்களுக்கு மத்தியில் நமது முதலமைச்சர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் மேல் மிகந்த மரியாதை உள்ளது, காரணம் இவருடைய நடவடிக்கைகள் தான்....

இவரை சமூக வலைத்தளங்களில் மரண கலாய் கலாய்த்து கொண்டு இருக்கிறார்கள், அது உங்கள் உரிமை அதை நான் தடுக்கவில்லை.... ஆனால் சற்று சிந்தியுங்கள் தமிழக பிரச்சனைகளுக்காக எத்தனை முறை கடந்த முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரை பார்த்தார்கள்.....?

இலங்கையில் கொத்து கொத்துக்காக நம் சொந்தங்கள் கொல்லப்படும் போது கூட, மந்திரி சபையில் தனக்கான இலாகா பெற்று கொள்ள தான் அப்போதைய முதல்வர் சென்றார்.... மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் கடிதம் எழுதிவிட்டு தன் கடமை முடிந்ததாக நினைத்து கொண்டு இருந்தார்கள். இதில் திமுக அதிமுக எல்லாம் ஒன்று தான்..... யாரும் யோக்கியர்கள் அல்ல.....

கடந்த ஒரு மாதத்தில் ரெண்டு முறை பிரதமரை மக்கள் பிரச்சனைக்காக டெல்லி சென்று சந்தித்தது உள்ளார்..... 




சுனாமி ஏற்பட்டபோது ஹெலிகாப்டரில் தான் அப்போதைய முதல்வர் சென்று பார்த்தார்.... கடந்த மாதம் வந்த வர்தா புயலின் போது நேரில் சென்று பார்த்தது யார்.... நம் முதல்வர் திரு பன்னீர் செல்வம் தான்.....



சென்னை மக்கள் குடிநீர் பிரச்னை தீர்க்க வேண்டி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் பெற போன வாரம் ஆந்திரா சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்து பேசி உள்ளார்.....




இவர் தினமும் தலைமை செயலகம் செல்கிறார், இவர் செல்கிறார் என்பதற்காக போலீஸ் எந்த இடத்திலேயும் போக்குவரத்து நிறுத்தப்படுவதில்லை.....

கடந்த காலங்களில் முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அத்தனை பெரும் வசைபாடினார்கள், இப்பொழுது கேட்டவுடன் எதிர்க்கட்சி தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது....


மிகவும் எளிமையான மனிதர், இவருக்கும் சிறிது வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே.....!

மக்களுக்காக இவர் அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதால் இவர் மேல் கட்சி தலைமை கடுமையான கோபத்தில் உள்ளது..... இவருக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் இருந்தாலும், இவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது மக்களாகிய நம் கடமையும் அல்லவா....... 

மக்களுக்காக போராடும் எளிமையான முதல்வரா அல்லது கடிதம் மூலம் மட்டும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் மற்ற கழக முதல்வர்களா சிந்தித்தது செயல்படுங்கள்.....

-பிரவின் சுந்தர் பூ .வெ

No comments:

Post a Comment