Sunday, January 1, 2017

மோடியின் பிம்பிளிக்கி பிலாபி.....

இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் மானியத்தை விட்டுத்தர கோரி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அவரின் அந்த அழைப்பை ஏற்று பெரும்பாலான நாட்டு மக்கள் மானியத்தை விட்டுக்கொடுத்தனர்.
இது ஒரு புறம் என்றால் திரு மத்திய நிதியமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்கள் ரயில்வே துறை கட்டுமான பணிகளை மேம்படுத்த தேவையான நிதி சுமை மக்கள் தான் ஏற்க வேண்டும் என்றும், வரும் பட்ஜெட்டில் ரயில் கட்டணம் ஏற்றப்படும் என்பதை மறைமுகமாக சொல்கிறார்.....
பண மதிப்பிழிக்க நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை மக்கள் சிறிது காலத்திற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.......

இப்படி மக்கள் மேல் நேரடியாக சுமைகளை ஏற்றுவது ஒரு புறம் என்றால்............ மோடியின் அரசின் மற்றொரு கோர முகம் ....

1) விளம்பரத்திற்கு செய்த செலவு 1100 கோடி.....
2) குஜராத்தில் நர்மதா அணையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ஒதிக்கீடு செய்த பணம் இது வரை ₹2,989 கோடி.....
3) மும்பையில் ₹3600 கோடியில் அரேபியன் கடற்கரையில் சத்ராபதி சிவாஜி சிலை கட்ட நிதி ஒதிக்கீடு.....
4) மும்பை தாதர் இந்து மில் வளாகத்தில் ₹425 கோடி செலவில் அம்பேத்கர் சிலை நிறுவ நிதி ஒதிக்கீடு....
5) மின்னணு பரிவர்த்தனை ஊக்குவிக்க ₹340 கோடி ரூபாயில் பரிசு திட்டம்.

இப்படி தான் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து கொண்டு இருக்கிறது மத்திய அரசு......

இது தேவைதானா...? நாட்டின் வளர்ச்சி வேலை வாய்ப்பை படித்த பட்டதாரிகளுக்கு ஏற்படுத்தி கொடுப்பதில் உள்ளதா அல்லது சிலைகள் மற்றும் வேற்று விளம்பரங்களுக்கு செலவு செய்வதில் உள்ளதா..?
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போதும், இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விலை குறையவில்லை அதற்கு மோடி அரசு கொடுத்த பதில் பெட்ரோல்/டீசல் விலை குறைந்தாலும், இங்கு யாரும் விலை குறைக்க போவதில்லை, இதன் மூலம் தனியாருக்கு தான் லாபம் அடைவார்கள் அந்த லாபத்தை ஏன் மத்தியரசே பெற்று கொள்ள கூடாது என்று வெளிப்படையாக கூறினார்கள்..... உண்மையில் பெட்ரோல்/டீசல் விலை குறைந்தாலே இங்கு பல பொருட்களின் விலை விழிச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது......

மோடியின் அரசு ஏழைகளுக்கான அரசு என்று சொல்லுவது வெறும் அரசியல் ஏமாற்று வேலை தான்..... உண்மையில் மோடியின் நடவடிக்கைகள் எல்லாம் ஏழைகளை நசுக்க தான்......

No comments:

Post a Comment