Sunday, January 1, 2017

கடன் மற்றும் பற்று அட்டைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் யாருக்கு லாபம் ?

கடன் மற்றும் பற்று அட்டைகளுக்கான பரிவர்த்தனை கட்டணம் முழுவதுமாக நீக்கினால் தான், மக்களுக்கு பயன் அளிக்கும்..... இதை நடைமுறைப்படுத்தும் வரை பணமில்லா பரிவர்த்தனை (Cashless Economy) சாத்தியமில்லை.....

நடைமுறையில் இரயில் இணையத்தில் முன்பதிவு செய்ய பரிவர்த்தனை கட்டணமாக ரூபாய் 25 வரை பிடித்தம் செய்ய படுகிறது.... அரசு பேருந்தில் முன்பதிவு செய்ய ரூபாய் 25 பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்க படுகிறது.... தமிழ்நாடு மின் வாரியம் மின் கட்டணம் இணையத்தில் செலுத்த, வங்கியை பொறுத்து ரூபாய் 10 முதல் 15 வரை வசூலிக்க படுகிறது.... இணைய பரிமாற்றம் (Netbanking) மூலம் பணம் அனுப்ப குறைந்தபட்சம் ரூபாய் 3 ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கும் பிடித்தம் செய்யப்படுகிறது...

State bank of India இல் Cash Deposit machine(CDM) மூலம் பணம் செலுத்தினால் ரூபாய் 25 பிடித்தம் செய்யப்படுகிறது....

மேலும் POS பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது, ஒவ்வொரு பரிவத்தனைக்கும் 1% முதல் 2.5% வரை பிடித்தம் செய்யப்படுகிறது.....
இப்படி ஒவ்வொரு முறையும் கடன் மற்றும் பற்று அட்டை பயன்படுத்தும் போது கட்டணங்கள் வசூலிப்பதால் சிரமத்திற்குள்ளாவது நடுத்தர வர்கத்தினர் தான்.....

பிரதமர் சொல்கிறார் 2000 வரை பற்று மற்றும் கடன் அட்டையில் செய்யும் பரிவர்தனைகளுக்கு சேவை வரி பிடித்தம் செய்ய படாது என்று.....
நடைமுறையில் பிடித்தும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...... நேற்று இரயிலில் முன்பதிவு செய்த போது 150 ரூபாய்க்கு 14 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது..... இது மோடி அவர்கள் சொல்லவதை வங்கிகள் பின்பற்று வதில்லை என்று நினைப்பதா.... அல்லது மோடி பொய் வாக்குறுதிகள் தருகிறார் என்று நினைப்பதா....?

No comments:

Post a Comment