Sunday, January 1, 2017

மோடியின் துக்ளக் தர்பாரின் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று......


அன்று: டிசம்பர் 31 வரை மக்கள் தங்களின் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.... மார்ச் 31 வரை ரிசர்வு வங்கிகள் செலுத்தாலும் ஆதலால் மக்கள் பிதியைடைந்து வங்கிகளில் முந்தியடிக்க வேண்டாம்.....

இன்று: டிசம்பர் 30 வரை ஒருவர் 5000 மட்டுமே வங்கிகளில் செலுத்த முடியும்.... அதுவும் தகுந்த விளக்கமளித்து , வங்கியதிகாரி திருப்தியடையும் பட்சத்தில் பணம் ஏற்கப்படும்..... (அதானே வங்கிக்கு வருகிறவர்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு, வங்கிக்கு வராமல் ரிசர்வு வங்கி மூலம் நேரடியாக வீட்டிற்கு வரும் சேகர் ரெட்டி போன்ற பண முதலாளிகளுக்கு இல்லை..... இவர்கள் திருட்டு தனத்தை பிடிக்க துப்புயில்லை, 5000 கொண்டு வரும் சாமானியர்களை திருடர்களாக சித்திரித்து இவர்கள் மேல் தான் மோடியின் அஸ்திரம் எல்லாம்.....)

அன்று: மக்கள் 2,50,000 வரை டெபாசிட் செய்யும் பணத்திற்கு வரி கிடையாது, அதற்கு மேல் கட்டும் பணத்திற்கு 50% வரி வசூலிக்க படும்.....
 
இன்று: அரசியல் கட்சிகள் தாங்கள் நன்கொடையாக பெற்ற பணத்திற்கு வரி வசூலிக்க பட மாட்டாது..... அவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் செலுத்தலாம்....

மோடி சொன்னது : ஏ.டி.எம் களில் மக்கள் 2500 வரை ஒரு நாளில் எடுத்து கொள்ளலாம், டிசம்பர் 15 க்கு மேல், கட்டுப்பாடு கொஞ்ச கொஞ்சமாக தகர்க்க படும்.
நடைமுறையில் நடப்பது: ஏ.டி.எம் களில் மக்கள் 2000 மட்டுமே எடுக்க முடியும். 1500, 500 எடுக்க முடியாது.... 500 முதல் 2000 க்குள் எடுக்க வேண்டுமென்றால் வங்கிகளில் கால்கடுக்க நின்று தான் எடுக்க வேண்டும், மேலும் டிசம்பர் 21 ஆகி விட்டது இன்னும் வரும் 2000 எடுக்கவே படாத பட்டு தான் எடுக்க முடிகிறது....

மோடி சொன்னது : வங்கிகளில் வாரம் ஒன்றிற்கு 24,000 வரை எடுத்து கொள்ளலாம்....
நடைமுறையில் நடப்பது: வங்கிகளில் 4000 முதல் 5000 மேல் தருவதில்லை.... கேட்டால் பணம் இல்லை என்று தான் பதில் வருகிறது.....

அருண் ஜெட்லி சொல்லுவது: ரிசர்வு வங்கியிடம் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது.
சாமானியனின் கேள்வி: உண்மையாகவே பணம் கையிருப்பில் இருந்தால் வங்கியிடம் கொடுத்து பண தட்டுப்பாடை குறைக்க வேண்டியது தானே....

அருண் ஜெட்லி சொன்னது அன்று: செல்லாது என்று அறிவிக்க பட்ட பணதிற்கு ஈடாக புதிய பணம் வரை ஏப்ரல் மாதம் வரை ஆகலாம்..... அதுவரை மக்கள் நாட்டிற்க்காக பொறுமைக்காக்க வேண்டும்.....
  
இன்று: செல்லாது என்று அறிவிக்க பட்ட பணதிற்கு ஈடாக புதிய பணம் அச்சிடப்படமாட்டாது, மக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்..... காகித பணத்தை கொஞ்சமாக கொஞ்சமாக குறைத்து கொள்ள வேண்டும்.....
அருண் ஜெட்லி சொல்லுவது: புதிய 10,20, 50 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக்கில் அச்சிட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது....

சாமானியனின் கேள்வி: ஒரு புறம் பிளாஸ்டிக் கில்லா சமுதாயம் உருவாக்க பிரச்சாரம் மறுபுறம் பிளாஸ்டிக்கில் பணம் அச்சிட பேச்சுவார்த்தை..... சபாஷ் இப்படி தான் இருக்க வேண்டும்....

அருண் ஜெட்லி நேற்று சொன்னது: புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளிவரும். அதில் L என்ற தொடரில் இருக்கும்....

சாமானியனின் கேள்வி: இதுக்கு முன்னாடி வெளியிட்ட புதிய 500 ரூபாய் இது வரை மக்களின் புழக்கத்திற்கு வந்தபாடுயில்லை , அதற்குள் 50 ரூபாய் நோட்டு வேறவா...... (ரெய்டுகளில் மாட்டும் பணம் கூட 2000 தான் இருக்கிறது அப்ப இந்த புதிய 500 தாள்கள் எங்க தான் இருக்கு....?)

மோடி நவம்பர் 8 அன்று சொன்னது: பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும்..... பெட்ரோல், டீசல் விலை குறையும்...
நடைமுறையில் நடப்பது: பெட்ரோல் / டீசல் ஏற்றம்..... ரயில் கட்டணம் ஏற்றப்படும் என்று சூசக தகவல்..... பெரும்பாலான ரயில்வே துறை தனியாரிடம் தாரை வார்க்கப்படும்......

No comments:

Post a Comment